ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட். சென்னை vs மற்ற ஊர்களில் சம்பளம் அடியோடு மாறுது
சென்னை: தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு (விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள்) 2026 மார்ச் நிலவரப்படி, 15% வரை சம்பள உயர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட படிகளை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு முதல் ஓராண்டுக்கான் தொகுப்பூதியம் ரூ.6250ல் இருந்து ரூ.7500ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டுநர்களுக்கான தொகுப்பூதியம் ரூ.5,500ல் இருந்து ரூ.6,600 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசாணையில் உள்ள முழு விவரம் பற்றி பார்ப்போம்.
புதிய பணியாளர்களுக்கு மாதம் ரூ.7,500 (விற்பனையாளர்) மற்றும் ரூ.6,600 (கட்டுநர்) தொகுப்பூதியமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அகவிலைப்படி மற்றும் இதர சலுகைகளும் வழங்கப்படுகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்படும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு, ஊதிய மறுசீரமைப்புக் குழு பரிந்துரையின் பேரில் இந்த உயர்வு வழங்கப்படுகிறது. இந்த நடவடிக்கை மாநிலம் முழுவதும் 22,804 விற்பனையாளர்கள் மற்றும் 3,216 பேக்கர்கள் உட்பட 26,020 ஊழியர்களும் பயன் பெற போகிறார்கள்.

இது தொடர்பாக தமிழக அரசின் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் புதிதாக நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு பணியில் சேர்ந்த ஒரு வருடம் மட்டும் ஓராண்டு வரை விற்பனையாளர்களுக்கு ரூ.7,500-ம், கட்டுனர்களுக்கு ரூ.6,600-ம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
ஓராண்டு பணி முடித்தவர்களில் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுனர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் புதிய ஊதியக்கற்றையில் கால முறை ஊதியம் வழங்கப்படும். பணியில் சேர்ந்த ஓராண்டுக்கு பிறகு கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் பணிபுரியும் விற்பனையாளர்களுக்கு ரூ.9,900 முதல் ரூ.39,600 வரையும் கட்டுனர்களுக்கு ரூ.9 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையிலும் புதிய ஊதியக்கற்றையில் கால முறை ஊதியம் வழங்கப்படும்.
ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முந்தைய ஊதிய கற்றையில் தற்போது பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கில் கொண்டு அதற்கு 15 சதவீதம் சேர்த்து வரும் கூடுதல் தொகையினை அடுத்த 10 ரூபாய்க்கு முழுமையாக்கி அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்படும். புதிதாக நிர்ணயிக்கப்பட கூடிய அடிப்படை ஊதியத்தில் 55 சதவீதம் அகவிலைப்படி பெற அனுமதிக்கப்படுகிறது. பின்னர் அரசு ஊழியர்களுக்கு அவ்வப்போது அரசு அறிவிக்கும் அகவிலைப்படி உயர்வு இப்பணியாளர்களுக்கும் பின்பற்றப்படும்.
தற்போது நடைமுறையில் இருக்கும் 3 சதவீதம் ஆண்டு ஊதிய உயர்வு தொடர்ந்து வழங்கப்படும். அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,500 மற்றும் ரூ.1,200 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.

இதர பகுதிகளில் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.1,200 மற்றும் ரூ.1000 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் அல்லது சென்னை மாநகராட்சிக்குள் பணிபுரியும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.700 மற்றும் ரூ.600 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும்.
இதர பகுதிகளில் அடிப்படையில் ஊதியத்தில் 4 சதவீதம் அல்லது முறையே ரூ.600 மற்றும் ரூ.500 இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். 1000 மற்றும் அதற்கு கீழ் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,500, கட்டுனர்களுக்கு ரூ.1000 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும். 1001 குடும்ப அட்டைகள் முதல் 1,500 குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.1,750, கட்டுனர்களுக்கு ரூ.1,250 நியாயவிலைக் கடை படி வழங்கப்படும். 1501 மற்றும் அதற்கு மேல் குடும்ப அட்டைகள் உள்ள விற்பனையாளர்கள் ரூ.2000, கட்டுனர்களுக்கு ரூ.1,500 நியாயவிலைக்கடை படி வழங்கப்படும். விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு முறையே ரூ.300 மருத்துவப்படி வழங்கப்படும்.

மலைவாழ் பகுதிகளில் உள்ள நியாய விலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள் மற்றும் கட்டுனர்களுக்கு மலைவாழ்படி மாதம் ஒன்றுக்கு அடிப்படை ஊதியத்தில் 20 சதவீதம் அல்லது அதிகபட்சம் மாதம் ஒன்றுக்கு ரூ.1,500 வழங்கப்படும். சராசரி கடல் மட்டத்தில் மலைவாழ்விட உயரம் 1000 மீட்டர் மேல் உள்ள பகுதிகளில் குளிர்காலபடி மாதம் ஒன்றுக்கு ரூ.400 வழங்கப்படும். இது குளிர் காலங்களில் மட்டும் வழங்கப்படும்.
மாற்றுத்திறனாளிகளுக்கான போக்குவரத்துபடி தற்போது உள்ளவாறு ரூ.2,500 வழங்கப்படும். ஒரே பதவியில் 10 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்கி தலா ஒரு ஊதிய உயர்வு (3 சதவீதம்) வழங்கப்படும். ஒரே பதவியில் 30 ஆண்டுகள் பணி முடித்த பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதிய உயர்வாக (3 சதவீதம்) ஒரு ஊதிய உயர்வு வழங்கப்படும்" இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications