ஆடி மாதம் பிறப்பு- சேலம் சுற்றுவட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு வழிபாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி மாதம் பிறந்ததை முன்னிட்டு சேலம் சுற்று வட்டாரத்தில் தேங்காய் சுட்டு விநாயகருக்கு உடைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

ஆடிப்பிறப்பு என்பது ஆடி மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படுகிற ஒரு திருநாளாகும். ஆடி மாதமானது தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் போற்றப்படுகின்றது.

Salem People Celebrate birth of Aadi month

புதுமண தம்பதிகள், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆடி 1-ந் தேதியை கொண்டாடும் விதமாக தேங்காயை உரைத்து அதில் நாட்டு சர்க்கரை, கடலைப்பருப்பு, அவுள் போன்ற நவதானியங்களை சேர்த்து சுட்டு முதற் கடவுளான விநாயகருக்கு உடைத்து வழிபடுவது வழக்கம்.

Salem People Celebrate birth of Aadi month

சேலம் மாவட்டம் எடப்பாடி, வெள்ளாண்டி வலசு, நைனாம்பட்டி, ஆகிய பகுதிகளில் இருந்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒன்றுகூடி தேங்காய் சுட்டு உடைத்து விநாயகரை வழிபட்டனர். இது சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் தனித்த பாரம்பரிய விழாவாகும்.

Salem People Celebrate birth of Aadi month

தேங்காய் சுடும் பண்டிகை மகாபாரத கதையுடன் தொடர்புடையதாகவே கூறப்படுகிறது. தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையிலான மகாபாரத யுத்தம் ஆடி மாதம் 1ஆம் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. இந்த யுத்தம் ஆடி 18 அன்று முடிவுக்கு வந்ததை நினைவுகூறும் வகையில் ஆடி 1-ம் தேதி தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

Salem People Celebrate birth of Aadi month
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+