அரசு உத்தரவை எதிர்த்த வழக்கு தள்ளுபடி! பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மனு திடீர் வாபஸ்!
சென்னை: குற்றவியல் நடவடிக்கை தொடர்பான அரசு உத்தரவை எதிர்த்து சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த ஊழியர்கள், கடந்த 2020 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக சீர்கேடுகள் குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தினர். இதனால் தொழிற்சங்க நிர்வாகிகள் சக்திவேல், கனிவண்ணன் உள்ளிட்ட நால்வரையும் முதலில் இடை நீக்கம் செய்த துணைவேந்தர் பின்னர் அவர்களை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டார்.

இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தொழிலாளர் நல ஆணையரகத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் தொழிலாளர்கள் சட்டத்திற்கு எதிராகவும், சட்ட விதிகளுக்கு விரோதமாகவும் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் அப்போதைய பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் இருவரும், பழி வாங்கும் நோக்கோடு செயல்பட்டதாக விசாரணையில் உறுதியானது.
இதனையடுத்து தொழிலாளர்கள் சட்டத்திற்கு விரோதமாக ஊழியர்களை டிஸ்மிஸ் செய்த பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், முன்னாள் பதிவாளர் பாலகுருநாதர் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர கடந்த மாதம் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறை செயலாளர் அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டார்.
பின்னர் சேலம் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், சேலம் இரண்டாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் துணைவேந்தர் ஜெகநாதன் மற்றும் முன்னாள் பதிவாளர் பாலகுருநாதன் ஆகியோர் மீது குற்றவியல் வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ள மனு அளித்தனர்.
இந்தநிலையில் தொழிலாளர் நலத்துறையின் அரசு உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ஆர்.மஞ்சுளா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் துணைவேந்தர் ஜெகநாதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கை முன்கூட்டியே தாக்கல் செய்து விட்டதாகவும், குற்றவியல் நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு பின்பு இங்கு வழக்கு தொடர்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்து வழக்கை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி, வழக்கை திரும்பப் பெற அனுமதியளித்து வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications