சமந்தாவுடன் விவாகரத்து ஏன்? அரசியல்வாதியுடன் தொடர்புப்படுத்திய பெண் அமைச்சரை திட்டிய நாக சைதன்யா
சென்னை: நடிகை சமந்தா, நாகசைதன்யாவை பிரிய தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகனும், பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானாவை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் பெண்அமைச்சர் கொண்டா சுரேகா கருத்து தெரிவித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை நடிகர் நாகசைதன்யா கடுமையாக விமர்சனம் செய்துள்ளதோடு, சமந்தா விவகாரத்தில்
நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் திருமணம் செய்து கொண்டனர். அதன்பிறகு கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்தனர். தற்போது விவாகரத்து பெற்று இருவரும் தனித்தனியாக வாழ்த்து வருகின்றனர். நாக சைதன்யா விரைவில் சோபிதா துலிபாலாவை திருமணம் செய்ய உள்ளார்.

சமந்தா இன்னும் திருமணம் பற்றி எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இந்நிலையில் தான் நடிகை சமந்தாவின் விவாகரத்துக்கு பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவரும், தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகன் கேடி ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா பேசியுள்ளார்.
இது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்நிலையில் தான் நடிகர் நாக சைதன்யா, பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‛‛விவாகரத்து என்பது அதிக வலி கொடுக்கும் ஈஸியான வலி மட்டுமின்றி வாழ்க்கையில் துரதிர்ஷ்டமான ஒரு முடிவாக இருக்கிறது. பல சிந்தனைகளுக்கு பிறகு பரஸ்பரமாக நானும், எனது முன்னாள் மனைவியும் (சமந்தா) இந்த முடிவை எடுத்தோம்.
"என் விவாகரத்துக்கு கேசிஆர் மகன் தான் காரணமா?" கொளுத்திப்போட்ட பெண் அமைச்சரை விளாசிய நடிகை சமந்தா
இந்த விவாகரத்து என்பது அமைதி, இருவரின் வேறுபட்ட இலக்குகளை நோக்கிய பயணத்தை மனதில் வைத்து இருவரும் ஒவ்வொருவருரின் எண்ணங்களை புரிந்து கொண்டு எடுத்த முடிவாகும். ஆனால் இப்போது இந்த விஷயத்தில் அபத்தமான மற்றும் ஏற்க முடியாத வதந்திகள் பரப்புகிறது. எனது முன்னாள் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மதிப்பளித்து நான் இதுபற்றி வெளியில் எதுவும் பேசாமல் இருந்தேன்.
ஆனால் இன்று, அமைச்சர் கொண்டா சுரேகா தவறான தகவலை கூறியது மட்டுமில்லாமல், அபத்தமான, ஏற்க முடியாத கருத்தை தெரிவித்துள்ளார். பெண்கள் என்றைக்குமே மதிக்கப்பட வேண்டியவர்கள். மீடியாவில் ஹெல்லைனில் வர வேண்டும் என்பதற்காக செலிபிரிட்டிகளில் தனிப்பட்ட வாழ்க்கையில் அட்வான்டேஸ் எடுத்து கொள்வது அவமானத்துக்குரியது’’ என காட்டமாக விமர்சனம் செய்துள்ளார்.


-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications