அம்மாவாகும் நடிகை சமந்தா? இணையத்தில் வெளியான "பேபி பம்ப்" வீடியோ.. குவியும் வாழ்த்துகள்
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா ரூத் பிரபு கருவுற்று இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்குக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்திருந்த சூழலில், சமந்தா கர்ப்பமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சில போட்டோக்களும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு சிறு கேரக்டரில் அறிமுகமான சமந்தா, பிறகே அதே படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக அறிமுகமானவர். தொடர்ந்து நான் ஈ, கத்தி, தெறி, மெர்சல் என பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிகளிலும் சமந்தா கலக்கி வருகிறார்.

குழந்தை
இவருக்கும் பிரபல பாலிவுட் இயக்குநர் ராஜ் நிடிமோரு என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. இதற்கிடையே இந்த தம்பதிக்கு விரைவில் குழந்தை பிறக்கப் போகிறது என்ற செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
39 வயதான சமந்தா தற்போது கர்ப்பமாக இருப்பதாக சமந்தாவிற்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.. இந்த ஆண்டு இறுதிக்குள் சமந்தா - ராஜ் தம்பதியினருக்கு குழந்தை பிறக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். இதுவரை சமந்தாவோ அல்லது ராஜ் நிடிமோருவோ இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.
பேபி பம்ப்
சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்ற பேச்சு முதன்முதலில் 'மா இண்டி பங்காரம்' திரைப்படத்தின் வெற்றி விழாவிற்குப் பிறகுதான் தொடங்கியது. அந்த விழாவில் சமந்தா கேக் வெட்டும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவின. அந்த வீடியோவில் சமந்தாவின் தோற்றத்தைப் பார்த்த ரசிகர்கள், அவருக்கு 'பேபி பம்ப்' தெரிவதாகக் கூறி விவாதிக்கத் தொடங்கினர்.
படம் வெளியாவதற்கு முன்பாக, சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு உள்ளிட்ட படக்குழுவினருடன் திருப்பதி திருமலை கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தனர். அப்போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. கோவிலை விட்டு வெளியே வரும்போது, கூட்ட நெரிசலில் இருந்து சமந்தாவை ராஜ் நிடிமோரு தனது கைகளால் அரவணைத்துப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்.
சமந்தா- ராஜ் நிடிமோரு
சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவரும் முதன்முதலில் 'தி ஃபேமிலி மேன் 2' தொடரில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு 'சிட்டாடல்: ஹனி பன்னி' தொடரிலும் இணைந்தனர். 2023ம் ஆண்டு முதல் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பார்ட்டியில் இருவரும் கைகோர்த்து இருக்கும் புகைப்படம் வெளியான பிறகு, இவர்களது காதலிப்பதாகச் செய்திகள் பரவின
திருமணம்
அப்போது முதலே சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஜுடன் இருக்கும் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வந்தார். ஜிம்மில் ஒன்றாக இருப்பது, விமானப் பயணங்கள் மற்றும் தனது வளர்ப்பு நாய்களுடன் ராஜ் விளையாடுவது போன்ற புகைப்படங்கள் மூலம் தனது காதலை அவர் சூசகமாகத் தெரிவித்தார். இந்த சூழலில் தான் கடந்தாண்டு டிசம்பர் 1ம் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருக்கும் லிங்க பைரவி கோவிலில் இவர்களது திருமணம் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என சுமார் 30 பேர் மட்டுமே இந்தத் திருமணத்தில் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications