அம்மா, மகளை வசியப்படுத்தி நிர்வாண பூஜை செய்த சாமியார் சதுர்வேதி எங்கே? போலீசார் திணறல்
கற்பழிப்பு சாமியார் சதுர்வேதியை கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறி வருகிறது.
Recommended Video

சென்னை: சித்து சாமியார் சதுர்வேதியை தேடி பிடிப்பதில் இன்னும் போலீசாருக்கு சிரமம் நிலவி வருகிறது.
ஆன்மீக சொற்பொழிவாளர்.. முதுநிலை பட்டதாரி.. ஸ்ரீராமானுஜர் மிஷன் டிரெஸ்ட் நிறுவனர்..தான் சதுர்வேதி. தன்னை தானே சாமியார் என்று சொல்லி கொண்டவர். தன்னை கிருஷ்ணனின் அவதாரம் என்று சொல்லி கொண்டவர். அரிசியை வெண்பொங்கலாக மாற்றுவது உள்ளிட்ட பல சித்து வேலைகளை செய்தவர். பெண்களை மயக்கும் கில்லாடி... தாடி, மீசையுடன் சாமியார் போலவே தோற்றம் இருந்ததால் ஏராளமான பெண்கள் தங்கள் பிரச்சனை தீர்க்க இவரை தேடி வந்தனர்.

சாமியார் வசம்
அப்படிதான் 2004-ம் ஆண்டு ஆழ்வார்பேட்டை தொழிலதிபர் சுரேஷ் பழக்கமானார். பூஜைகளை செய்வதற்காக சுரேஷ் வீட்டுக்கு சாமியார் போக... அங்கே அவரது மனைவியும், 16 வயது மகளும் முழுக்க பக்தைகளாகவே மாறிவிட்டனர். நாள் ஆக ஆக சுரேஷின் வீட்டின் ஒரு பகுதி சாமியார் வசம் போனது.. கொஞ்ச நாளில் மனைவி, மகளும் சாமியார் வசம் போய்விட்டார்கள்.

வழக்கு பதிவு
தாய்-மகள் என இருவரையும் சாமியார் பூஜை செய்வதாக கூறி நிர்வாணப்படுத்தியது... பலமுறை பலாத்காரம் செய்தது.. பிறகு தாய்- மகள் இருவரையும் கடத்தி சென்றது... என்று பகீர் சம்பவங்கள் நடக்க, நடக்க சுரேஷ் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்க போய் இந்த பிரச்சனை பூதாகரமானது.
கற்பழிப்பு, கடத்தல் உள்ளிட்ட 18 பிரிவுகளில் சாமியார் மீது வழக்கு பதிவு ஆனது. நீண்ட வருடங்களுக்கு சாமியார் கைது செய்யப்பட்டார், சுரேஷின் மனைவியும் மகளும் மீட்கப்பட்டனர்.

பிடிவாரண்ட்
ஆனால் 2016-ல் சாமியார் ஜாமீனில் வெளியே வந்தார். அப்போது மகளிர் கோர்ட்டில் விசாரணை நடந்து கொண்டு இருந்தது. ஜாமீனில் வெளியே வந்தவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை. பிடிவாரண்ட்டும் பிறப்பிக்கப்பட்டது. தற்போது வழக்கும் முடியும் நிலையில் உள்ளது. இந்த நேரத்தில் அவரை கைது செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தேடப்படும் குற்றவாளி
சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டும் விட்டது. இப்போது சாமியாரை தேடும் படலம் தொடர்கிறது. அடிக்கடி இவர் பெயரை மாற்றிக் கொள்வது ஊர், மாநிலங்களையும் மாற்றி கொள்வார். நேபாளம் பக்கம் அதிகமாக சுற்றுவார் என்ற தகவல் வரவே அங்கே தனிப்படை சென்றிருக்கிறார்கள். ஆனாலும் இவரை பிடிப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

மழ மழ முகம்
இவர் திடீர் திடீரென தனது தோற்றத்தை மாற்றிக் கொள்பவர் என்பதால் தற்போது எந்த கெட்-அப்பில் இருக்கிறார் என தெரியவில்லை. ஏற்கனவே தாடி, மீசையுடன் இருந்த சாமியார், கொஞ்ச நாளைக்கு முன்பு அவை இல்லாமல் மழ மழ முகத்துடன் இருப்பதாக சமீபத்தில் ஒரு போட்டோவை போலீசார் விசாரணையில் வெளி கொண்டு வந்தனர். அந்த போட்டோவைதான் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்கள், போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செல்போன் இல்லை
இதில் சாமியார் செல்போன் பயன்படுத்த மாட்டாராம். அதனால் கெட்-அப் சேஞ்ச், இடத்தை மாற்றி கொள்வது, செல்போன் இல்லாதது என எல்லாம் சேர்ந்து சாமியாரை பிடிப்பதில் சிக்கலாகி போலீசார் திணறி வருகிறார்கள்!!
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications