”தீட்டு” என்பதை அடிப்படை கொள்கையாக கொண்டதுதான் சனாதனம்: மீண்டும் தாக்கும் திருமாவளவன்!
சென்னை: ஜாதிய தீட்டு, சமூகங்களிடையே தீட்டு, பெண்களுக்கு தீட்டு என தீட்டு என்பதை அடிப்படையாக கொண்டதுதான் சனாதனம் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் மலேசியா எழுத்தாளர் பெ இராஜேந்திரன் எழுதிய மந்திரக் கணங்கள் என்னும் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தொல்.திருமாவளவன் பேசியதாவது: சனாதனம் என்பது சமத்துவத்தை மறுக்கிறது. சனாதனம் என்பது சகோதரத்துவத்தை மறுக்கிறது. தந்தை பெரியார் காலத்தில் இருந்தே பேசப்படுகிற சொல்தான் சனாதனம். இன்று புதியதாக பேசுவது அல்ல. அயோத்திதாச பண்டிதர் காலத்தில் ஆரியம் என்று சொல்லப்பட்டதே பின்னர் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் காலத்தில் பார்ப்பனியம் என அழைத்தோம். அதுவே இன்றைய இந்துத்துவா.

சனாதனம் என்பது ஒரு பெண் என்பவள் ஆண்களுக்கு கட்டுப்பட்டவள் என்கிறது; ஆணின் இச்சைக்கு உரியவள் என்கிறது. வாரிசுகளைப் பெறக்கூடிய இயந்திரம் என்கிறது. இதுதான் சனாதனம் வலியுறுத்தக் கூடியது. அதாவது சனாதனம் என்பது அழியாதது- நிலையானது என சொல்லப்படுகிறது. பிறப்பால் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்பதை நிலைப்படுத்துகிறது.
எந்த ஒரு கடவுளுமே இப்படியெல்லாம் பாகுபாடு காட்டு என்று சொல்வது இல்லை. மதத்தை பரப்புகிறவர்கள்.. கடவுளை பரப்புகிறவர்கள்தான் இந்த பாகுபாட்டை வளர்க்கின்றனர். எந்த ஒரு மதத்திலுமே சொல்லப்படாதது தீட்டு கொள்கை. ஆனால் சனாதனம் தீட்டு கொள்கையை வலியுறுத்துகிறது.
தீட்டு என்பது தாழ்த்தப்பட்ட மக்கள் மீதானது மட்டும் அல்ல. ஒவ்வொரு ஜாதிக்குள்ளேயும் கூட தீட்டு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு மனிதர்களுக்கும் கருத்தியல் தீட்டு இருக்கிறது. அனைத்துவிதமான பெண்களுக்கும் தீட்டு இருக்கிறது. அதுவும் பிராமண பெண்களோ, சூத்திரப் பெண்களோ பெண்கள் அனைவரையுமே சூத்திரர்கள் என்கிறது சனாதனம். மாதவிடாய் காரணத்தை காட்டி பெண்களை வீட்டுக்குள் அனுமதிக்காதது தீட்டு. இப்படியான ஒரு தீட்டு எந்த ஒரு மதத்திலுமே இல்லை. இப்படியான தீட்டு கொள்கைதான் சனாதனம். பிராமணர் சமூகங்களுக்கு இடையே கூட தீட்டு உண்டு.
அதேபோல அகமண முறை அதாவது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது எந்த ஒரு மதத்திலும் இல்லை. பிற மதங்களில் ஆண், பெண் இடையேயான பாகுபாடு இருக்கிறது. இல்லாமல் இல்லை. ஆனால் இத்தகைய அகமண முறை என்பது ஒரே ஜாதிக்குள்தான் திருமணம் செய்ய வேண்டும் என்பது சனாதனத்தில்தான் இருக்கிறது. ஆகையால்தான் சனாதனம் என்பது சமத்துவத்துக்கு எதிரானது என்கிறோம். இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
விசிகவுக்கான 8 தொகுதிகள் முடிவாகிவிட்டது.. ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்.. திருமாவளவன் பேட்டி! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க












Click it and Unblock the Notifications