மணல் கொள்ளையை தடுக்க ஏசி அறையில் ஆலோசிப்பதால் பலனில்லை.. உயர்நீதிமன்றம் அதிருப்தி
சென்னை: மணல் கொள்ளையை தடுக்க ஆற்றங்கரைகளில் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி கண்காணிக்கும் முறையை, விரைந்து தொடங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக திருவண்ணாமலையை சேர்ந்த ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சவுந்தரராஜன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வேணுகோபால், வைத்தியநாதன் அடங்கிய அமர்வு முன் விசாரிக்கப்பட்டது.

இவ்வழக்கில் தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணல் கொள்ளையைத் தடுக்க மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மணல் கடத்தலில் ஈடுபட்ட 783 வாகனங்கள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் போதுமான விவரங்கள் இல்லை என நீதிபதிகள் குறிப்பிட்டனர். மணல் கடத்தலை தடுக்க முடியாத நிலைக்கு ஒருசில அதிகாரிகளே காரணம் எனவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
மணல் கொள்ளையை தடுக்க தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆற்றங்கரைகளிலும், ஆளில்லா விமானம் மூலம் கண்காணிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அரசு துரிதகதியில் செயல்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர். மாவட்ட மற்றும் தாலுகா அளவுகளில் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உள்ள உயரதிகாரிகளை இணைக்கவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்
மாவட்ட, தாலுகா குழுக்கள், ஏசி அறையில் ஆலோசிப்பதால் எந்தப் பயனும் இல்லை எனவும், களத்துக்குச் சென்று கடத்தலை தடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். மேலும் மணல் கடத்தலை தடுக்க நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் கடமை தவறினால் அவர்களை சஸ்பெண்ட் செய்வது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications