அஸ்ஸாம் மலையில் பதுங்க திட்டம் போட்டிருந்தார் சந்தன கடத்தல் வீரப்பன்: மனைவி முத்துலட்சுமி ஓபன் டாக்!
சென்னை: தமிழ்நாடு அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன், தலைமறைவாக இருந்த போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு தப்பி ஓடி பதுங்கி வாழ திட்டமிட்டிருந்ததாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களை மிரட்டி வந்தவர் சந்தனக் கடத்தல். தென்னிந்திய மாநில போலீசாருக்கு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிம்ம சொப்பனமாக பதுங்கி இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பல போலீஸ் அதிகாரிகளை கொடூரமாக படுகொலை செய்தவர். தந்தக் கடத்தல், சந்தனக் கடத்தல் தொடங்கி மனிதர்களை வேட்டையாடிய வீரப்பன், திடீரென தமிழ்த்தேசியவாதியாக உருவெடுத்தார். தமிழ்நாடு விடுதலைப் படையினர் வீரப்பனுடன் இணைந்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. பின்னர் தமிழ்நாடு அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தனக் கடத்தல் குறித்த ஆவணப்படமாக The Hunt for Veerappan எனும் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4 பாகங்களைக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடரானது பல்வேறு அரசல் புரசலான தகவல்களின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி வந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பம் மனைவியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான முத்துலட்சுமி இந்த ஆவணப்படத் தொடரில் கூறியிருப்பதாவது: வீரப்பனை யாரும் கிட்ட போய் பார்த்தது இல்லை. அந்த செய்தி மட்டும் அப்படியே பரவுது. வீரப்பன்னா யானை சுடுவாராம்.. 2 கொலை நடந்துச்சுன்னு சொன்னாங்க.. அதனால வீரப்பனை தேடுறாங்கன்னு சொன்னாங்க.. இந்த கல்லுல இருந்து அந்த கல்லுக்கு குதிப்பாராம்.. கண்டேபிடிக்க முடியாதாம்.. அப்ப எங்க வீட்டு பக்கத்துல இருந்தாங்க.. அப்ப வீரப்பனும் அவரோட ஆட்களும் துப்பாக்கியோடு லைனா நடந்து வர்றது அட்ராக்சனா இருக்கும். முதன் முதலாக முத்து இங்க வாய்யா.. உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கலாம் என்றார் வீரப்பன். உன்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன்னு சொன்னார்.

எனக்கு தாலி கட்டும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தார்னு சொல்லமாட்டேன். அவருக்குள்ள ஏதோ ஒரு வருத்தம் இருந்துச்சு. எங்க திருமண நாளில் ஒரு பையன் பாலாற்றில் இருந்து ஓடிவந்து தமிழ்நாடு , கர்நாடகா போலீசுக்கும் சரியான சண்டை.. கட்டைகளை(சந்தன கட்டைகள்) எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்கன்னு சொன்னார்.. பின்னாளில் ஒருநாள், அஸ்ஸாம் மலையில இடம் பார்த்துட்டேன்.. எல்லா லோடும் அனுப்பின பின்னாடி அங்க போய் யாருக்கும் தெரியாம அமைதியா வாழ்ந்துடலாம். ஆளெல்லாம் அனுப்பி போய் பார்த்துட்டும் வந்தாச்சுன்னு சொன்னார்.. ஆனால் அது நடக்கலை.. இவ்வாறு முத்துலட்சுமி அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications