அஸ்ஸாம் மலையில் பதுங்க திட்டம் போட்டிருந்தார் சந்தன கடத்தல் வீரப்பன்: மனைவி முத்துலட்சுமி ஓபன் டாக்!
சென்னை: தமிழ்நாடு அதிரடிப்படையால் சுட்டுக் கொல்லப்பட்ட சந்தனக் கடத்தல் வீரப்பன், தலைமறைவாக இருந்த போது அஸ்ஸாம் மாநிலத்துக்கு தப்பி ஓடி பதுங்கி வாழ திட்டமிட்டிருந்ததாக அவரது மனைவி முத்துலட்சுமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மாநிலங்களை மிரட்டி வந்தவர் சந்தனக் கடத்தல். தென்னிந்திய மாநில போலீசாருக்கு சத்தியமங்கலம் வனப்பகுதியில் சிம்ம சொப்பனமாக பதுங்கி இருந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் பல போலீஸ் அதிகாரிகளை கொடூரமாக படுகொலை செய்தவர். தந்தக் கடத்தல், சந்தனக் கடத்தல் தொடங்கி மனிதர்களை வேட்டையாடிய வீரப்பன், திடீரென தமிழ்த்தேசியவாதியாக உருவெடுத்தார். தமிழ்நாடு விடுதலைப் படையினர் வீரப்பனுடன் இணைந்ததால் இந்த மாற்றம் நிகழ்ந்தது. பின்னர் தமிழ்நாடு அதிரடிப்படையால் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சந்தனக் கடத்தல் குறித்த ஆவணப்படமாக The Hunt for Veerappan எனும் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 4 பாகங்களைக் கொண்ட சந்தனக் கடத்தல் வீரப்பன் தொடரானது பல்வேறு அரசல் புரசலான தகவல்களின் உண்மைதன்மையை வெளிப்படுத்தி வந்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பம் மனைவியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய நிர்வாகியுமான முத்துலட்சுமி இந்த ஆவணப்படத் தொடரில் கூறியிருப்பதாவது: வீரப்பனை யாரும் கிட்ட போய் பார்த்தது இல்லை. அந்த செய்தி மட்டும் அப்படியே பரவுது. வீரப்பன்னா யானை சுடுவாராம்.. 2 கொலை நடந்துச்சுன்னு சொன்னாங்க.. அதனால வீரப்பனை தேடுறாங்கன்னு சொன்னாங்க.. இந்த கல்லுல இருந்து அந்த கல்லுக்கு குதிப்பாராம்.. கண்டேபிடிக்க முடியாதாம்.. அப்ப எங்க வீட்டு பக்கத்துல இருந்தாங்க.. அப்ப வீரப்பனும் அவரோட ஆட்களும் துப்பாக்கியோடு லைனா நடந்து வர்றது அட்ராக்சனா இருக்கும். முதன் முதலாக முத்து இங்க வாய்யா.. உன் கிட்ட ஒரு விஷயம் கேட்கலாம் என்றார் வீரப்பன். உன்னை கல்யாணம் செய்து கொள்ளலாம் என இருக்கிறேன்னு சொன்னார்.

எனக்கு தாலி கட்டும்போது ரொம்ப சந்தோஷமா இருந்தார்னு சொல்லமாட்டேன். அவருக்குள்ள ஏதோ ஒரு வருத்தம் இருந்துச்சு. எங்க திருமண நாளில் ஒரு பையன் பாலாற்றில் இருந்து ஓடிவந்து தமிழ்நாடு , கர்நாடகா போலீசுக்கும் சரியான சண்டை.. கட்டைகளை(சந்தன கட்டைகள்) எல்லாம் அள்ளிட்டு போயிட்டாங்கன்னு சொன்னார்.. பின்னாளில் ஒருநாள், அஸ்ஸாம் மலையில இடம் பார்த்துட்டேன்.. எல்லா லோடும் அனுப்பின பின்னாடி அங்க போய் யாருக்கும் தெரியாம அமைதியா வாழ்ந்துடலாம். ஆளெல்லாம் அனுப்பி போய் பார்த்துட்டும் வந்தாச்சுன்னு சொன்னார்.. ஆனால் அது நடக்கலை.. இவ்வாறு முத்துலட்சுமி அந்த ஆவணப்படத்தில் தெரிவித்துள்ளார்.
-
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்! -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
Durga Stalin: துர்கா என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசலை! 5 ஆண்டு ரகசியத்தை உடைத்த ஸ்டாலின் -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
நிர்மலா சீதாராமன் கணவர் எடுத்த "ஜீரோ பிஜேபி" விஸ்வரூபம்.. 27 தொகுதிகளிலும் பாஜக காலி..? திடுக்கிட்ட தாமரை -
தவெக 4 - 6 சீட்களில் வெல்ல வாய்ப்பு.. 20% வாக்குகளை அள்ளக்கூடும்.. ABP Nadu கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
விஜய் இந்த தேர்தலில் ஆட்டக்காரர் தான்.. மே 4 தவெகவுக்கு பல பாடங்களை கற்பிக்கும்.. இயக்குநர் அமீர்!












Click it and Unblock the Notifications