சென்னை தூய்மைப் பணியாளர்கள் மீது காவல் துறை வன்முறை – வன்னி அரசு கண்டனம்
சென்னை: 13 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களை காவல்துறை கைது செய்துள்ளது. தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு திமுக கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்திருந்தன. நீதிமன்ற உத்தரவுப்படி போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை அப்புறப்படுத்தி கைது செய்துள்ளது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காவல்துறையின் நடவடிக்கைக்கு விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி மண்டலம் 5 மற்றும் 6 ஆகியவற்றில் சுகாதாரப் பணியை தனியார் நிறுவனத்திற்கு விட மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த முடிவை எதிர்த்தும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் தூய்மைப் பணியாளர்கள், ரிப்பன் மாளிகை முன்பு கடந்த 13 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
அரசுத் தரப்பில் 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துவிட்டது. இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த உத்தரவிடப்பட்டது. நேற்று மாலை அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள், "எங்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக அரசே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. காவல்துறை முடிந்தால் எங்களை அப்புறப்படுத்தட்டும். எங்களின் போராட்டத்தில் இருந்து எந்த வகையிலும் பின் வாங்க மாட்டோம். அரசுக்கு தூய்மைப் பணியாளர்களை விட தனியார் நிறுவனம் தான் முக்கியம்." என்று விமர்சனம் செய்திருந்தனர்.
வன்னி அரசு கண்டனம்
நேற்று மாலை முதலே ரிப்பன் மாளிகையை சுற்றி ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டனர். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி நீங்களே கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர். தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால், நேற்று இரவு அந்த மக்களை காவல்துறை குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். அப்போது போராட்டக்காரர்கள் மீது காவல்துறை வன்முறையில் ஈடுபட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு, "தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர், சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகையில் அறவழியில் போராடி வந்தனர்.
காவல்துறை தாக்குதல்
அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். இடது சாரி கட்சித் தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவும் அவர் வலியுறுத்தினார். இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை.
மேலும் போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக வழக்கறிஞர் நிலவு மொழி மற்றும் சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர்.
மக்கள் விரோதப்போக்கு
காவல்துறையின் இந்தப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது. ஜனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே ஜனநாயகத்துக்கு எதிரானதாகும்.
நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்." என்று கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications