தமிழ்நாட்டில் ரேஷன் கடைகள் ஆரம்பிக்க பிள்ளையார்சுழி போட்ட சங்கரய்யா! 11 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினர்
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் சங்கரய்யா காலமான நிலையில் அவர் ஆற்றிய தொண்டுகள் குறித்தும் மக்கள் நல சேவைகள் குறித்தும் இங்கே பார்க்கலாம்.
1938 ஆம் ஆண்டு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சங்கரய்யா, அப்போதைய முதல்வர் ராஜாஜி கொண்டு வந்த கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு கல்லூரி மாணவராக இருந்த போதே கைது செய்யப்பட்டார். மேலும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வைத்தியநாத ஐயர், முத்துராமலிங்கத் தேவர் தலைமையில் ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்ற போது அந்த போராட்டத்திற்கு ஆதரவளித்து மாணவர் படையை திரட்டி கொண்டு சென்றவர் சங்கரய்யா.

தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்று வகுப்புகளை புறக்கணித்ததால், தேர்வுவெழுத முடியாமல், பட்டப்படிப்பை தொடர முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டவர் சங்கரய்யா. ஆனால் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் சமூக களப் போராளியாக மாறினார்.
ஒரு பக்கம் சுதந்திரப் போராட்டத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட சங்கரய்யா, மற்றொரு பக்கம் கிராமப்புறங்களில் பண்ணையார்களால் சுரண்டப்பட்ட விவசாய தொழிலாளிகள், பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக ஓங்கி குரல் கொடுத்தவர். தமிழக சட்டமன்றத்தில் 1967, 1977,மற்றும் 1980 ஆகிய காலகட்டங்களில் சட்டமன்ற உறுப்பினராக 11 ஆண்டுகள் பணியாற்றி தமிழக மக்களின் யதார்த்த நிலையை சட்டமன்றத்தில் எடுத்துரைத்தவர்.
மக்கள் நலன் சார்ந்த எண்ணற்ற பிரச்சனைகளுக்கு சட்டசபை பேச்சின் மூலம் தீர்வுகளை பெற்றுக் கொடுத்தவர் தோழர் சங்கரய்யா. தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம்(ரேஷன் கடைகள்) உருவாக முதல் குரல் கொடுத்தவர் தோழர் சக்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது. தன் அரசியல் பொதுவாழ்வில் ஏராளமான சாதி மறுப்பு மற்றும் சீர்த்திருத்த திருமணங்களை நடத்தி வைத்த பெருமைக்குரியவர் சங்கரய்யா. அதேபோல் தானும் சாதி மறுப்பு திருமணம் செய்ததோடு தனது வாரிசுகளுக்கும் சாதி மறுப்பு திருமணங்களை செய்து வைத்து சமூக நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்தவர் தோழர் சங்கரய்யா.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications