இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் கடைசி நாள் வரை சிறையில் இருந்த தியாகி! யார் இந்த சங்கரய்யா!
சென்னை: இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைக்கும் கடைசி நாள் வரை சிறையில் இருந்த தியாகி சங்கரய்யா!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான சங்கரய்யா (102), இரு நாட்களுக்கு முன்னர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை 9.30 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது.

அவருக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இவர் யார் என்பதை பார்ப்போம்! விடுதலை போராட்ட வீரரும் , தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் ஒருவருமான சங்கரய்யா 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஆத்தூரில் 1921 ஆம் ஆண்டு ஜூலை 15 ஆம் தேதி பிறந்த சங்கரய்யா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அப்போது விடுதலை போராட்டத்தில் கலந்து கொண்டு போராட தொடங்கினார். இதனால் 1941 ஆம் ஆண்டு அவர் கல்லூரி இறுதியாண்டு படித்துக் கொண்டிருந்த போதே ஆங்கிலேய அரசால் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
8 ஆண்டுகள் சிறையில் இருந்த சங்கரய்யா, 1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் விடுதலை செய்யப்பட்டார். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி மாலை 6 மணிக்கு மதுரை சிறைச்சாலைக்குள் நுழைந்த நீதிபதி, இந்த வழக்கு உங்கள் மீது போலீஸாரால் புனையப்பட்டது. அதனால் உங்களை நான் விடுதலை செய்கிறேன் என கூறினார். இதையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அப்போது முதல் சங்கரய்யா தன்னை பொது வாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டார். 1964 ஆம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டாக பிரிந்த போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை தொடங்கியவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் சங்கரய்யா.
1995 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளராக இருந்த சங்கரய்யா, 1967 ஆம் ஆண்டு மதுரை மேற்கு தொகுதியில் இருந்தும், 1977, 1980 ஆகிய தேர்தல்களில் மதுரை கிழக்கு தொகுதியில் இருந்தும் சட்டசபைக்கு தேர்வானார். திமுக அரசால் தலைசால் விருது பெற்றவர் சங்கரய்யா.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications