நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா.. அந்த கொடநாடு கேஸ் என்னாச்சு? சசிகலா திடீர் ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக அரசின் செயல்பாடுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேட்காமல் இருக்கலாம்.. நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா என சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென ஆவேசப்பட்டார் சசிகலா.

லோக்சபா தேர்தலில் அதிமுக பெரும் தோல்வி அடைந்தது. இதனையடுத்து அதிமுகவில் அனைத்து பிரிவினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்கிற குரல்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால் இதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டவட்டமாக நிராகரித்துவிட்டது.

sasikala admk edappadi palaniswami

இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சசிகலா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி ஜாதி அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். மேலும் அதிமுகவில் தாம் என்ட்ரி ஆகிவிட்டதாகவும் அதிமுக ஒருங்கிணைக்கப்படும்; 2026-ல் அதிமுகதான் ஆட்சி அமைக்கும் என்றும் சசிகலா திட்டவட்டமாக கூறினார்.

அப்போது, திமுக அரசு மீது பல்வேறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சசிகலா முன்வைத்தார். மாணவர்களுக்கான சீருடைகள் தாமதமாக வழங்கப்படுகிறது; போதுமான அளவுக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை என சசிகலாவின் இந்த பட்டியல் நீண்டு கொண்டே இருந்தது.

sasikala admk edappadi palaniswami

இதன் பின்னர் திடீரென திமுக அரசின் இதனை எல்லாம் ஆதரவு டிவி, பத்திரிகைகள் கேட்கவில்லை என கூறினார் சசிகலா. அப்போது பத்திரிகையாளர்கள் பதில் தெரிவிக்க, திடீரென சாமியாடியவர் போல "எதிர்க்கட்சித் தலைவர் கேட்கலை.. நான் எதிர்க்கட்சியா.. நான் கேட்கிறேன்யா" ஆவேசப்பட்டார். மேலும் "இந்த பாருங்க.. நான் அரசாங்கத்தைக் கேட்கக் கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு.. எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை..

sasikala admk edappadi palaniswami politics

ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை செய்துகிட்டு இருக்கு? என்ன வேலை செய்துகிட்டு இருக்கு என ஊருக்கே தெரியுது.. உலகத்துக்கே தெரியுது.. உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்துல போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்களே..

sasikala admk edappadi palaniswami politics

அந்த கொடநாடு கேஸை முடிக்கக் கூட வக்கில்லையே உங்களுக்கு? கொடநாடு கேஸில் யார் மீது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுங்க.. அதை ஏன் நீங்க செய்ய மாட்டேன் என்கிறீர்கள்? விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாமல் புறக்கணிப்பதற்கு திமுகதான் காரணம்.. கொடநாடு கேஸ் எப்போது முடிகிறதோ அப்போதுதான் ஊர் உலகத்துக்கு உண்மை தெரிய வரும். இதுதான் உண்மை. இவ்வாறு சசிகலா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+