ஜெயலலிதா பிறந்தநாள்: சசிகலா ஆட்டம் இன்றுமுதல் தொடங்குமா? உஷார் மோடில் அதிமுக
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73வது பிறந்தநாளை முன்னிட்டு, சசிகலா தனது அரசியல் பிரவேசத்தை தீவிரமாக முன்னெடுப்பாரா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக மற்றும் வி.கே.சசிகலா இடையிலான மோதல் எதிர்வரும் நாட்களில் தீவிரமடைய வாய்ப்புள்ளது. இன்று (பிப்.24) முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாள். நிறைய அரசியல் சதுரங்கள் விளையாட்டுகளை இன்றிலிருந்து கூட எதிர்பார்க்கலாம்.

இரு முகாம்களும் ஜெயலலிதாவின் மக்கள் செல்வாக்கிற்கு உரிமை கோர முயற்சிக்கும். தமிழக முதல்வரும் அதிமுக முதலமைச்சர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரனின் தொகுதியான ஆர்.கே.நகரில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
இ.பி.எஸ்ஸின் இந்த நடவடிக்கை, 'நான் தான் ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு' என்று சசிகலா முகாமுக்கு ஒரு செய்தியை அனுப்புவதாக அமைகிறது.
இதற்கிடையில், பெங்களூரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் சென்னையில் பிரமாண்டமாக நுழைந்து தற்போது வரை அமைதி காத்து வரும் சசிகலா, இன்று ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்துவார். எவ்வாறாயினும், இது சசிகலாவுடன் தொடர்புடைய ஏதாவது ஒரு இல்லத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவின் நினைவுச்சின்னம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்ட பின்னரே அவர் அங்கு செல்வார் என்று சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுறுசுறுப்பாக அரசியலில் களமாடவும், அதிமுகவை மீட்டெடுக்கவும் சசிகலா தெளிவாக உள்ளார். இருப்பினும், அவரது அரசியல் திட்டங்கள் பிப்ரவரி 24 க்குப் பிறகுதான் வெளியிடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், டிடிவி தினகரன் ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று தம்பரத்தில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். அதேசமயம், நாளை (பிப்.25) அவரது அமமுக கட்சியின் பொதுக் கூட்டத்தை நடத்துகிறார். அதிமுகவை மீட்டெடுப்பதே சசிகலாவின் நோக்கம் என்பதால், அவர் அமமுக கட்சியின் ஒரு பகுதியாக இருக்க மாட்டார்.
கட்சியின் பொதுச் செயலாளராக தனது பதவியை மீட்டெடுப்பதே அவரது முதல் படி. இந்த வழக்கை எதிர்த்துப் போராட அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார், மேலும் இந்த வழக்கின் விசாரணை மார்ச் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது.
அதிமுக தாங்கள் தைரியமாக இருப்பது போன்று காட்டிக் கொள்ளலாம். ஆனால் கட்சி பதட்டமாக இருக்கிறது. சசிகலா சென்னை திரும்பியதிலிருந்தே அமைதியாக இருந்து வருகிறார், ஆனால் மெரினாவில் ஜெயலலிதா நினைவுச்சின்னத்தை அரசு மூடுவதற்கு, சசிகலா சென்னையில் தொடர்ந்து இருப்பதே காரணமாக அமைகிறது.
2021 மாநில சட்டமன்றத் தேர்தலின் போது தொண்டர்கள் ஒற்றுமையாக இருக்குமாறு அதிமுக மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
-
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications