Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"புரட்சி".. அவமானப்படுத்தப்பட்ட ஓபிஎஸ்.. நேரம் பார்த்து களத்தில் குதித்த சசிகலா.. பரபர அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மோதல் நிலவி வரும் நிலையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுக பொதுக்குழுவில் நேற்று மிகப்பெரிய அளவில் மோதல் ஏற்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் நேற்று பொதுக்குழுவில் அவமதிக்கப்பட்ட நிலையில் இறுக்கமான முகத்தோடு வெளியேறினார்.

நேற்று பொதுக்குழுவில் அதிமுகவின் தீர்மானக்குழு ஓபிஎஸ் ஒப்புதலோடு வழங்கிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன.

23 தீர்மானங்கள்

23 தீர்மானங்கள்

23 தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம். ஒற்றை தலைமையை கொண்டு வருவதற்கான தீர்மானத்தை கொண்டு வரும் பொதுக்குழுவே உண்மையான பொதுக்குழு என்று எடப்பாடி ஆதரவாளர்கள் அறிவித்தனர். அதோடு இந்த நிலையில் ஜூலை 11ம் தேதி மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் என்றும் அறிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் நடந்த இந்த அத்தனை விஷயங்களையும் நேற்று சசிகலா டிவி மூலமும், அதிமுகவில் உள்ள சில ஆதரவாளர்கள் மூலம் தெரிந்து கொண்டு இருக்கிறார்.

ஓபிஎஸ்

ஓபிஎஸ்

முக்கியமாக ஓபிஎஸ் அவமதிக்கப்பட்டு, அனுப்பப்பட்டதை சசிகலா டிவியில் பார்த்து இருக்கிறார். இந்த நிலையில்தான், அதிமுகவில் மோதல் நிலவி வருவதற்கு இடையில் சசிகலா புரட்சி பயணம் மேற்கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறார். புரட்சித்தாய் சின்னம்மா அவர்களின் புரட்சிப்பயணம் என்ற தலைப்பில் இது தொடர்பாக அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், தமிழ் மண்ணின் உரிமைகளை காத்திடவும், பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணி காத்திடும் வகையிலும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் புரட்சிப்பயணத்தை தொடங்குகிறார்.

சத்துணவு திட்டம்

சத்துணவு திட்டம்

சத்துணவு கண்ட சரித்திர நாயகனின் பெருமைகளையும், தாலிக்கு தங்கம் தந்த தவப்புதல்வியின் எண்ணங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பயணமாக மேற்கொள்ளவிருக்கிறார்.
புரட்சிப்பயணத்தை வருகின்ற 26-06-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 12.30 மணிக்கு, தியாகராய நகர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கோயம்பேடு, பூந்தமல்லி, திருவள்ளூர் ரோடு வழியாக திருத்தணி பைபாஸ் சென்றடைகிறார். பின்னர் திருத்தணி பைபாஸிலிருந்து தனது புரட்சிப்பயணத்தை தொடங்கும் புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் திருத்தணி, குண்டலூர் ஆகிய பகுதிகளில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் குண்டலூரில் அமைந்துள்ள புரட்சித்தலைவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை மரியாதை செலுத்துகிறார்.

 தியாகராஜ நகர் வீடு

தியாகராஜ நகர் வீடு

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கோரமங்கலம், K.G.கண்டிகை, S.V.G.புரம், கிருஷ்ணாகுப்பம், R.K.பேட்டை ஆகிய இடங்களில் உள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் சந்திக்கிறார். அச்சமயம் R.K.பேட்டையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் புரட்சித்தலைவர் ஆகியோரின் திருவுருவ சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். அதன்பிறகு, அம்மையார்குப்பம் சென்று அங்குள்ள கழக தொண்டர்களையும், பொது மக்களையும் நேரில் சந்தித்த பின்னர், அங்கிருந்து புறப்பட்டு தியாகராய நகர் இல்லம் வந்தடைகிறார்.

Recommended Video

    ADMK உருவான Flashback! DMK பொதுக்குழுவால் நீக்கப்பட்ட MGR! | *Politcs | OneIndia Tamil
    சின்னம்மா பயணம்

    சின்னம்மா பயணம்

    புரட்சித்தாய் சின்னம்மா அவர்கள் மேற்கொள்ளும் இந்த புரட்சிப்பயணத்தில் கழக நிர்வாகிகள், கழக முன்னோடிகள், கழக தொண்டர்கள், புரட்சித்தலைவியை தங்களது முன் மாதிரியாக ஏற்றுக்கொண்டு தன் நெஞ்சத்தில் சுமந்து கொண்டிருக்கும் அனைத்து தாய்மார்கள், இளம் தலைமுறையினர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஜாதி மத பேதமின்றி அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள், என்று சசிகலா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+