சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கியது வருமான வரித்துறை
சென்னை: சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கி வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது. சிறுதாவூர், கொடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை முடக்கி உள்ளது.
2017ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொந்தமான 200 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் சில முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது.
கிடைத்த அடிப்படையில் வருமான வரித்துறை சசிகலா இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான ரூ.2000 கோடி சொத்துக்களை முடக்கி உள்ளது. முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ. 2,000 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

300 கோடி சொத்து முடக்கம்
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவின் போயஸ் கார்டன் சொத்துக்கள் ஏற்கனவே வருமான வரித்துறையினரால் முடக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு எதிரே உள்ள 10 கிரவுண்ட் இடத்தை சசிகலாவுக்கு சொந்தமானதாக கூறப்பட்ட நிலையில் பினாமி சட்டத்தின் கீழ் கடந்த மாதம் வருமான வரித்துறை முடக்கி இருந்தது இந்த சொத்துக்களின் ரூ.300 கோடி என்று கூறப்பட்டது.

முடக்கிய வருமான வரித்துறை
சசிகலா விரைவில் சிறையிலிருந்து வெளியே வந்த உடன் ஜெயலலிதா இல்லம் போலவே ஒரு இல்லத்தை போயஸ் கார்டனில் கட்டப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், வருமான வரித்துறையினர் சொத்துக்களை முடக்கி அப்போது உத்தரவிட்டனர்.

2 கோடி சொத்துக்கள்
இந்நிலையில் 2017ல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையின் அடிப்படையில் சிறுதாவூர், கொடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு சொத்துக்களை பினாமி தடுப்பு சட்டத்தில் வருமான வரித்துறை முடக்கி உள்ளது. ஒட்டமொத்தமாக சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 2 ஆயிரம் கோடி சொத்துக்களை வருமான வரித்துறை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் முடக்கி உள்ளது.

அடுத்த ஆண்டு விடுதலை
சிறையில் உள்ள சசிகலா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27ம் தேதி விடுதலையாக உள்ளதாக பெங்களூரு சிறை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா , இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அஹ்ரகார சிறையில் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் சிறையில் இருந்து வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications