ரெடியான பக்கெட் பிரியாணி.. அதிமுக கோட்டையை உடைக்க போகும் "கூர் ஆயுதம்".. மிகப்பெரிய ஆபரேஷன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது. ஜெயக்குமார் மட்டுமே எடப்பாடி உடன் இருக்கிறார். மற்றவர்களுக்கு கார், வீடு எல்லாம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர், என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, அதிமுகவில் நான் ரீ என்ட்ரி ஆக போகிறேன். நான் மீண்டும் அரசியலுக்குள் என்ட்ரி ஆகும் நேரம் வந்துவிட்டது. இந்த பாருங்க.. நான் அரசாங்கத்தைக் கேட்கக் கூடிய துணிச்சல் எனக்கு இருக்கு.. எனக்கு மடியில் கனமில்லை.. வழியில் பயமில்லை..

edappadi palanisamy aiadmk

ஒரு கொடநாடு கேஸை வைத்துக் கொண்டு இந்த திமுக என்ன வேலை செய்துகிட்டு இருக்கு? என்ன வேலை செய்துகிட்டு இருக்கு என ஊருக்கே தெரியுது.. உலகத்துக்கே தெரியுது.. உங்களோட விசாரணை ஏன் ஆமை வேகத்துல போகுது? போலீஸை அப்படி வைத்திருக்கிறோம்.. இப்படி வைத்திருக்கிறோம் என்கிறீர்களே..

அதிமுகவில் என்னுடைய அரசியல் தொடங்கும். மீண்டும் நான் ஆக்டிவாக இருப்பேன். அதிமுக முடிந்துவிட்டது என்று யாரும் நினைக்க வேண்டாம். என்னுடைய என்ட்ரி ஆரம்பித்துவிட்டது.

அதிமுகவில் சாதி பார்க்கும் பழக்கம் வந்துவிட்டது. சாதி பார்க்கும் வழக்கம் தற்போது அதிமுகவில் வருவதை அனுமதிக்க முடியாது. லோக்சபா தேர்தலில் அதிமுக மூன்று, நான்காம் இடத்திற்கு செல்ல யார் காரணம் என்று சசிகலா கூறி உள்ளார்.

அதிமுக: அதிமுகவில் நடக்கும் இந்த மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது. ஜெயக்குமார் மட்டுமே எடப்பாடி உடன் இருக்கிறார். மற்றவர்களுக்கு கார், வீடு எல்லாம் கொடுத்து விலைக்கு வாங்கிவிட்டனர். எல்லாம் போய்விட்டனர். எல்லோரும் சசிகலாவை லைட்டாக எடுத்துக்கொண்டனர். சசிகலா என்னும் ஆயுதம் தயாராகி வருகிறது.

அவர் தனியாக சாதாரண சசிகலா இல்லை. அவர் இப்போது பாஜக சசிகலா. டிடிவி தினகரன் கூட அவருக்கு எதிராக இருக்க மாட்டார். சசிகலா இப்போது இருக்கும் சாதாரண சசிகலா இல்லை. அவர் பாஜகவின் சசிகலா. சசிகலா பின்னால் திவாகரன் இருக்கிறார். அவர் சொல்லித்தான் டிடிவி தினகரனை ஒதுக்கி வைத்து உள்ளனர். திவாகரன் கையில் மாஜி அமைச்சர்கள் இருக்கின்றனர்.

திவாகரன்தான் எல்லா அமைச்சர்களையும் கையில் வைத்துள்ளார். அவர்கள் எல்லாம் சசிகலா உடன் சேர உள்ளனர். முக்கியமான மணியான அமைச்சர் கூட சசிகலாவை சந்தித்து உள்ளனர். சசிகலா உடன் நெருக்கமாக உள்ளனர். ஒரு வீடு, பணம் எல்லாம் சசிகலா கொடுத்துள்ளார். முக்கியமாக அதிமுகவில் இருக்கும் முக்கியமான நிர்வாகி ஒருவரை எடப்பாடியிடம் இருந்து சசிகலா தூக்கி விட்டார்.

பக்கெட் பிரியாணிக்கு கூட இடம் மாறும் ஒருவரை சசிகலா தூக்கிவிட்டார். இனி எடப்பாடி நினைத்தால் பொதுக்குழு கூட கூட்ட முடியாது. அந்த அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. வரும் நாட்களில் அதிமுகவில் பெரிய பெரிய மாற்றங்கள் நடக்க போகிறது. எடப்பாடி உடன் இருக்கும் தலைவர்கள் கூட விலை போய்விட்டனர். அதிமுக உடைந்துவிட்டது, என்று மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+