காவலர் வில்சன், திருபுவனம் ராமலிங்கம் கொலை - திமுகவை கேள்வி கேட்கும் எச்.ராஜா

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருவதாகவும் இந்த விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாகவும் எச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: திருபுவனத்தில் ராமலிங்கம் கொலை தொடர்பாகவும், காவலர் வில்சன் கொல்லப்பட்ட போதும் முழு மவுனம் சாதித்த திமுக இப்போது சாத்தான்குளம் தந்தை மகன் படுகொலை விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரையும் விசாரணைக்கு உயிரோடு அழைத்துச்சென்ற போலீஸ், அவரை சடலமாகத்தான் உறவினர்களிடம் ஒப்படைத்தது. இருவரின் மரணம் தமிழ்நாடு மட்டுமல்ல உலக அளவில் பேசப்படுகிறது.

Sathankulam custodial death : H.Raja tweets against Kanimozhi

ட்விட்டரில் உள்ளூர் மக்கள் முதல் உலக பிரபலங்கள் வரை பதிவிட்டு காவல்துறையினருக்கு எதிராக கண்டனத்தை பதிவிட்டு வருகின்றனர். பாஜகவின் முக்கிய தலைவர் எச். ராஜாவும் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். சாத்தான்குளத்தில் போலீஸ் கஸ்டடியில் நடந்த இறப்பு (custodial death) வன்மையாக கண்டிக்கத்தக்கது... தமிழக அரசு உடனடியாக 4 காவலரையும் சஸ்பென்ட் செய்துள்ளது... இதற்கான மேஜிஸ்திரேட் நீதி விசாரணை நடந்து வருகிறது... அதன் அடிப்படையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டு கொண்டுள்ளார். இதற்கு பலரும் எதிர்ப்பாக பதிவிட்டனர்.

Sathankulam custodial death : H.Raja tweets against Kanimozhi

இந்த நிலையில் அவர் திமுக இரட்டை வேடம் போடுகிறது என்று கூறி ஒரு ட்வீட் போட்டிருக்கிறார். அதில்
தஞ்சை திருப்புவனத்தில் முஸ்லிம் தீவிரவாதிகளால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டதை திமுக கண்டிக்கவில்லை.காவலர் வில்சன் முஸ்லீம்களால் கொல்லப்பட்டதற்கும் முழு மௌனம். இச்சம்பவத்தில் மேஜிஸ்திரேட் விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். திமுக இரட்டை வேடம் ஏன் என்று கேட்டிருக்கிறார்.

சாத்தான்குளம் தந்தை மகன் மரணம் தொடர்பாக திமுக எம்.பி கனிமொழி தொடர்ந்து ட்வீட் பதிவிட்டு வருகிறார். அவரது சமீபத்திய ட்வீட்டில் அரசை கேள்வி கேட்டிருந்தார்.

Sathankulam custodial death : H.Raja tweets against Kanimozhi

சாத்தான்குளம் காவல்துறை விசாரணையில் தந்தை மகன் என இரண்டு பேர் கொல்லப்பட்ட நிலையிலும் இதுவரை சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்படாததும், கைது நடவடிக்கை எடுக்கப்படாததும் ஏன்? எடப்பாடி அரசு இந்த சம்பவத்தில்
குற்றவாளிகளை காக்கும் நோக்கத்தோடு மௌனம் காக்கிறது என்று பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் தரும் விதமாகவே எச். ராஜா ட்வீட் பதிவிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+