பயங்கரம்.. பட்டாக்கத்தியுடன்.. சத்யம் டிவி ஆபிசில் தாக்குதல்.. கொந்தளித்த திருமாவளவன்.. கண்டனம்..!
சத்யம் டிவி அலுவலகம் தாக்கப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்
சென்னை: "சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அவரது பின்னணியில் யாவர் இருப்பினும் அவர்களைக் கைது செய்யவேண்டும்" என்று விசிக தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
ராயபுரத்தில் சத்தியம் டிவி ஆபீஸ் அமைந்துள்ளது.. இங்கு நேற்று மாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே வந்து, மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து ஆபீசில் இருந்தவர்களை மிரட்டியுள்ளார்.
அத்துடன், அங்கிருந்த கண்ணாடிகள், கம்ப்யூட்டர்கள், டேபிள் போன்றவற்றையும் அடித்து நொறுக்கியுள்ளார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

தகவல்
தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட நபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.. இதை அங்கிருந்த ஊழியர்கள் வீடியோ எடுத்தனர்.. இதை பார்த்த அந்த நபர், ஆத்திரமடைந்து அனைவரையும் ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.. "எடுங்க.. நல்ல வீடியோ எடுங்க.. இதெல்லாம் நாளைக்கு முக்கிய செய்தியா வரணும்' என்று சத்தம் போட்டு பேசினார். அந்த வீடியோவும் இணையத்தில் வெளியானது.

போலீஸ்
சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்த பட்டாக்கத்தி, கேடயம், குஜராத் பதிவெண் கொண்ட ஷிப்ட் கார் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.. மேலும் அவரிடம் விசாரணையும் நடந்தது.. முதற்கட்ட விசாரணையில் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்மநபர் கோவையை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பது தெரியவந்தது. இவர் சில தினங்களுக்கு முன் குஜராத்தில் இருக்கும் தனது அண்ணனை சந்திப்பதற்காக குஜராத் சென்றுள்ளார்... அங்கேதான், ஆன்லைனில் கத்தி, கேடயம் போன்றவற்றை ஆர்டர் செய்து அவற்றை வாங்கியிருக்கிறார்.

சென்னை
அங்கிருந்து காரை எடுத்துக் கொண்டு நேராக சென்னை வந்து சத்தியம் டிவி ஆபீசுக்குள் சென்று தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்துள்ளது... இதற்கான பின்னணி என்ன என்பது குறித்து போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்... சென்னையில் ஒரு ஊடக நிறுவனத்தின் மீதே தாக்குதல் நடத்திய இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவனும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
|
சத்யம் டிவி
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "சத்யம் தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பட்டாக்கத்தியுடன் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ள நபரைக் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டும். அவரது பின்னணியில் யாவர் இருப்பினும் அவர்களைக் கைது செய்யவேண்டும்.,,இந்த இழிசெயலை விசிக சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
திமுகவில் குறைந்த எண்ணிக்கை தொகுதியால் வலி இருக்கிறது! ஆனாலும் 234-லிலும்...! திருமாவளவன் வேதனை -
உள்ள அழகுறேன்..வெளியே சிரிக்குறேன்! 8ஐ கேட்கும் திருமா? 6க்கு குறையாத ’அறிவாலயம்’! பரபர பஞ்சாயத்து! -
"ப்ளீஸ் திருமா".. ஸ்டாலினின் அந்த வார்த்தை! மா.கம்யூனிஸ்ட்டால் விசிகவிற்கு விழும் அடி.. திமுக ‘செக்’ -
விசிகவுக்கு எத்தனை தொகுதிகள்? வெளிப்படையாக சொன்ன திருமாவளவன்! ராமதாஸுக்கு வாழ்த்துகளாம்! -
5 பேர் ரெடி.. விசிகவில் சிட்டிங் எம்எல்ஏக்கு மீண்டும் சீட் கிடைக்குமா? திருமாவளவன் சொன்ன மேட்டர் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி -
பாமகவுக்கு 18 தொகுதி, அமமுகவுக்கு 9, பாஜக+ 40.. 167 தொகுதிகளில் அதிமுக போட்டி? இறுதியான சீட் ஷேரிங்? -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல்












Click it and Unblock the Notifications