நெல்லை மாவட்டத்தில் திமுக ஆதிக்கம் தொடருமாமே.. நயினார் நாகேந்திரனுக்கு வெற்றி முகம்.. சர்வே
சென்னை: தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சத்தியம் டி.வி கருத்து கணிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
திருநெல்வேலி மாவட்டத்தை பொறுத்தவரை பாளையங்கோட்டை தொகுதியில் திமுக 39% அதிமுக 35% அமமுக 15% வாக்குகள் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ்- 36%; அதிமுக 31%; அமமுக 29% நாம் தமிழர் 4% வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராதாபுரம்:தொகுதியில் திமுக- 46%; அதிமுக 45%; அமமுக 4%; நாம் தமிழர் 4% மநீம 1% வாக்குகள் பெரும் என கூறப்பட்டுள்ளது. திருநெல்வேலி தொகுதியில் பாஜக - 42%; திமுக 39% அமமுக 9%; நாம் தமிழர் 9% மநீம 1% வாக்குகள் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது நெல்லை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வெற்றி பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து திமுக சார்பில் லெட்சுமணன் களம் இறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.