சுஜித் மீட்பு பணியில் கவனம்.. நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைப்பு
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசின் மூன்று அமைச்சர்கள் மீட்பு பணியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.

மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அங்குதான் இரண்டு நாட்களாக இருக்கிறார். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவில் இருந்து மீட்பு பணி நடக்கும் பகுதியில் இருக்கிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். தமிழக அரசின் மொத்த கவனமும் தற்போது இந்த சிறுவனை மீட்பதிலேயே இருக்கிறது. இதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டிலும் அதிமுக கட்சிதான் இடைத்தேர்தலில் வென்றது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றார். 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் புகழேந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் முத்தமிழ்ச்செல்வன்.
அதேபோல் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,562 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 62,229 ஆகும்.
இந்த இரண்டு தொகுதிகளிலும் இதற்கு முன் திமுக கூட்டணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது அதை அதிமுக கைப்பற்றி உள்ளது. தற்போது இதற்கான பதவி ஏற்பு விழா தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. பதவியேற்பு நாளை நடைபெற இருந்த நிலையில், நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications