சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. இனி ஓராண்டு வெளியே வர முடியாது!
சென்னை: நிபந்தனை ஜாமீனை பின்பற்றி நீதிமன்றத்தில் சரணடையாமல் ஆந்திராவில் தலைமறைவாக இருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் தான் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதனால் ஓராண்டு வரை அவரால் ஜாமீனில் வெளியே வர முடியாது.
யூடியூப் பிரபலமான சவுக்கு சங்கர் தொடர்ந்து தமிழக அரசை குற்றம்சாட்டி வந்தார். குறிப்பாக முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதோடு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக பேசி வீடியோ வெளியிட்டதோடு, சமூக வலைதளங்களிலும் கருத்துகள் தெரிவித்து வந்தார்.
12 வாரம் நிபந்தனை ஜாமீன்
இதற்கிடையே தான் யூடியூபர் சவுக்கு சங்கர் மீது ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசார் 2 மோசடி வழக்குகளை கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தனர். அதன்பிறகு அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து உடல்நல பிரச்சனையை காரணம் காட்டி அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த நிபந்தனை ஜாமீன் 12 வாரங்கள் கொடுக்கப்பட்டது.
சவுக்கு சங்கர் தலைமறைவு
சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மார்ச் 25 வரை அவருக்கு இடைக்கால நிபந்தனை ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருந்தது. இதனால் மார்ச் 25ம் தேதிக்கு பிறகு சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். ஆனால் அவர் ஆஜராகாமல் தலைமறைவானார்.
ஆந்திராவில் கைது
சவுக்கு சங்கரை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில் தான் ஆந்திராவில் லாட்ஜில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை சென்னை போலீசார் கைது செய்தனர். இந்த கைது நடவடிக்கை கடந்த 8 ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. அதன்பிறகு சவுக்கு சங்கர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் தற்போது இன்னொரு தகவல் வெளியாகி உள்ளது.
குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது
அதன்படி சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல் புழல் சிறையில் உள்ள சவுக்கு சங்கரிடம் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக குண்டர் சட்டம் பாய்ந்தால் ஓராண்டு வரை ஜாமீன் கிடைக்காது. இதனால் சவுக்கு சங்கருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தை அணுகி குண்டர் சட்டத்தை உடைக்க முடியும். அது, நடந்தால் சவுக்கு சங்கர் ஓராண்டுக்கு முன்பே வழக்கில் இருந்து ஜாமீனில் வெளிவர முடியும். இல்லாவிட்டால் சிக்கல் தான்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை -
23000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பின்பும்.. டிசிஎஸ் நிறுவனத்தில் கட்டுப்படுத்த முடியாத செலவு! -
லீக் ஆன ஜனநாயகன்.. நானே ரீலிஸ் பண்ணித்தரேன்னு சொன்னேனே விஜய்.. விட்டு விளாசிய சாட்டை! -
செந்தில் பாலாஜி பெயரை சொல்லும்போது ‘டங் ஸ்லிப்’.. கோவை தெற்கில் உளறிய பியூஷ் கோயல் -
மும்பை ரெஸ்டாரண்டில் நடந்த சந்திப்பு.. சமாதானமான ஸ்மிருதி மந்தனா குடும்பம்.. மீண்டும் திருமணம்? -
ஜனநாயகன் ரூ.500 கோடி பட்ஜெட் படம்! HD பிரிண்ட்டில் வெளியானது எப்படி? தமிழக டிஜிபியிடம் புகார் -
நம்பர் 5.. அடித்து சொல்லும் சர்வேக்கள்! திமுக+ 180 இடங்களை தாண்டுகிறது! அதிமுக ஓவர்? முக்கிய கணிப்பு














Click it and Unblock the Notifications