Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

SBI பேங்க் அதிரடி.. தமிழக அரசு பஸ்களில் வருகிறது டிக்கெட் கருவிகள்..ஆச்சரியம் தந்த பாரத ஸ்டேட் வங்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் பல்வேறு அதிரடிகளை செய்துவரும் தமிழக போக்குவரத்து துறை, தற்போது மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுக்க போகிறது.

தமிழகம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் தினமும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் பயணித்து வருகின்றனர். அவர்களுக்கு டிக்கெட்டு வழங்கும் வகையில், மின்னணு பயணச்சீட்டு கருவிகள் 16 வருடங்களுக்கு முன்பே அமல்படுத்தப்பட்டன. பிறகு கடந்த 2011-ல், அதி நவீனபயணச்சீட்டு கருவிகள் மூலம் பயணச்சீட்டு வழங்க அரசு திட்டமிட்டது.

SBI State bank of India plans to provide ticketing tool to transport corporations and TN Transport Department

இதற்காக மத்திய அரசின் நிதியுதவியுடன் சுமார் ரூ.20 கோடி மதிப்பீட்டில் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, சுமார் 30 ஆயிரம் கருவிகள் ஒப்பந்த அடிப்படையிலும் வாங்கப்பட்டிருந்தன. ஆனாலும், புதிதாக வாங்கப்பட்ட கருவிகளில் பல்வேறு சிக்கல்கள் இருந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுவிட்டன.

கண்டக்டர்கள்: இந்நிலையில், அதைவிட அதிநவீன டிக்கெட் கருவிகளை வாங்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த கருவி மூலம், பஸ்ஸில் பயணம் செய்பவர்களுககு எளிதாக டிக்கெட் விநியோகிக்க முடியும்.. கண்டக்டருக்கும் பணி எளிதாகும்.. இதன்மூலம், ஒவ்வொரு பஸ்ஸிலும் வழங்கப்படும் டிக்கெட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள, மண்டல மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரியவரும்.

டிக்கெட் வழங்கும்போதே, பயணிகளின் எண்ணிக்கை அவர்கள் செல்லும் தூரம், பஸ்களில் இடம் இருக்கிறதா? பஸ்கள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா? போன்ற விவரங்களும், போக்குவரத்து கழக உயர் அதிகாரிகளுக்கு தெரியவரும். இந்த கருவிகள் ஒப்பந்த நிறுவனத்திடமிருந்து வரத் தொடங்கியிருப்பதாகவும், விரைவில் நடைமுறைக்கு வரும் என்றும், கடந்த அக்டோபரிலேயே செய்திகள் வெளியாகியிருந்தன.

டிக்கெட்கள்: இந்நிலையில் மீண்டும் பயணச்சீட்டு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்குவதற்கான நடவடிக்கைகளை போக்குவரத்துத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்ல, போக்குவரத்துக் கழகங்களுக்கு 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகளை இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக அதிகாரிகள் சொல்லும்போது, "ஒரே அட்டையை பயன்படுத்தி பொதுப்போக்குவரத்து வாகனங்கள் அனைத்திலும் பயணச்சீட்டு பெறும் வகையில் என்சிஎம்சி என்ற அட்டையை கடந்த வருடம் மத்திய அரசு அறிமுகம் செய்திருந்தது. இந்த அட்டையை தற்போது, பயன்படுத்த வேண்டுமானால் பொது போக்குவரத்தில் பயணச்சீட்டு கருவியின் பயன்பாடு அவசியம்.

பயணச்சீட்டு: அதனால், சுமார் 38 ஆயிரம் பயணச்சீட்டு கருவிகள் வரை போக்குவரத்துக் கழகங்களுக்கு இலவசமாக வழங்க பாரத ஸ்டேட் வங்கி தயாராக உள்ளது.. இது வெற்றியடையும் பட்சத்தில், முதல்வர் இந்த திட்டத்தைதொடங்கி வைப்பார். இந்த கருவிகளுக்கான சர்வர், காகித பயன்பாடு மட்டுமே போக்குவரத்துக் கழகங்களுக்கான செலவினங்களாக இருக்கும்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+