தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி!
Recommended Video
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதை அவர் படித்து பார்க்காமலேயே உயிரிழந்துவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால், சென்னையில் கடந்த 1981-ஆம் ஆண்டு சரவணபவன் ஹோட்டலை திறந்துவைத்தார். இதன் வெற்றி காரணமாக இன்று உலகளவில் ஹோட்டல்களின் ராஜாவாக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தனது 48-ஆவது வயதில் ஹோட்டல் ஊழியரின் மகளும் இளம்பெண்ணான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். தனது ஆசையை அவரிடம் சொன்னபோது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் அண்ணாச்சியின் ஆசைக்கு ஜீவஜோதியின் குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

கோபம்
எனினும் ஜீவஜோதிக்கு இதில் துளிக் கூட விருப்பமில்லை. இந்த நிலையில் அவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து காதலித்தவரையே கரம் பிடித்தார் ஜீவஜோதி. இதனால் ராஜகோபால் வெகுண்டெழுந்தார்.

ஆயுள் தண்டனை
பின்னர் சாந்தகுமாரிடம் ஜீவஜோதியை விட்டு விலகுமாறு மிரட்டினார். ஆனால் அவர் முடியாது என்று கூறவே அவரை ஆள் வைத்து கடத்தி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தள்ளி கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.

ஆயுள் தண்டனை உறுதி
இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 29-ஆம் தேதி அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு
இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

முதல் தீர்ப்பு
இதில் தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இந்த நிலையில் முதல் முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது. அதில் முதல் தீர்ப்பே சரவணபவன் ராஜகோபாலின் தீர்ப்புதான். இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பை படித்து பார்க்காமலேயே ராஜகோபால் மறைந்துவிட்டார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications