ரூ688.48 கோடியில்.. மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS சிறப்பு திட்டம்- ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக RIGHTS என்ற சிறப்பு திட்டம் கொண்டுவரப்படும் என்றும், ரூ.688.48 கோடி மதிப்பிலான இந்த திட்டம் உலக வங்கி ஆய்வில் இருப்பதாகவும், 2021-22ம் நிதியாண்டு இடைக்கால பட்ஜெட் உரையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் ஏழைகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் வழங்குவதற்கு 8 சமூக பாதுகாப்பு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. 33 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர்.

2021-22 நிதியாண்டில் 4 ஆயிரத்து 316 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உழவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உதவி பெறும் வகையில் முதல்வரின் உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 2058 கோடி செலவிடப்பட்டு உழவர்கள் பலன் அடைந்துள்ளனர்.
புரட்சித்தலைவி அம்மா காப்பீட்டு திட்டத்தை இந்திய காப்பீடு நிறுவனத்தோடு இணைந்து செயல்படுத்தி வருகிறோம்.
தமிழ் நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள 55 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இதனால் பலன் கிடைக்கிறது. குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு 2 லட்சம் ரூபாய் காப்பீடு தொகை வழங்கப்படும். மேலும் குடும்பத் தலைவரின் விபத்து மரணத்திற்கு 4 லட்சம் ரூபாய் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications