Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடடா.. இனி மழைக்கு “லீவ்” கஷ்டம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் இருந்து பறந்த ஆர்டர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இனிமேல் அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வங்கக்கடலில் தென்கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

School Education department order to district collectors on rain holiday announcement

மழை நிலவரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் பெரிதாக இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.

பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளைப் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில், காலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதிகாலையிலேயே அறிவிக்காமல், 8 மணிக்கு மேல் அறிவிப்பதால், பள்ளி மாணவர்கள் பரபரப்புடன் கிளம்பி பள்ளிக்கு சென்று திரும்பும் நிலை ஏற்படுவதை தவிர்க்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மழை காரணமாக விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள நிபந்தனைகள் காரணமாக இனி அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+