அடடா.. இனி மழைக்கு “லீவ்” கஷ்டம்! மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வி துறையில் இருந்து பறந்த ஆர்டர்!
சென்னை: இனிமேல் அதிகனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும், அதுவும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் தென்கிழக்கு மற்றும் அந்தமான் கடல் பகுதியில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், இந்தப் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவி வருவதாலும் அடுத்த சில நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

மழை நிலவரத்தைப் பொறுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். விடுமுறை அறிவிக்கப்பட்ட பிறகு, அந்த மாவட்டங்களில் மழையின் தாக்கம் பெரிதாக இல்லாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பள்ளிகளுக்கு மழைக்கால விடுமுறை அளிப்பதில் 7 வகையான விதிமுறைகளைப் பின்பற்ற பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது. அதன்படி, அதி கனமழை பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றும் லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், விடுமுறை குறித்த முடிவை பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன்பே எடுக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில், காலையில் தொடர்ச்சியாக மழை பெய்யும்போது பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அதிகாலையிலேயே அறிவிக்காமல், 8 மணிக்கு மேல் அறிவிப்பதால், பள்ளி மாணவர்கள் பரபரப்புடன் கிளம்பி பள்ளிக்கு சென்று திரும்பும் நிலை ஏற்படுவதை தவிர்க்க இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டம் முழுவதுமான மழை நிலவரம், பாதிப்புகள், மழைநீர் தேங்கியுள்ள பகுதிகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன்படி, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்கக் கூடாது எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மழை காரணமாக விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும். விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் முழுமையாக நடத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பள்ளிகளில் மழைநீர் தேங்கி இருந்தால், அவற்றை அப்புறப்படுத்தி, மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்து பள்ளிகள் செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ள நிபந்தனைகள் காரணமாக இனி அவ்வளவு எளிதில் விடுமுறை கிடைக்காது எனக் கூறப்படுகிறது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications