சென்னையில் பயங்கரம்.. வீடு புகுந்து ஆசிரியை, கணவருக்கு அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்

சென்னையில் பள்ளி ஆசிரியை உட்படபேரை மர்மநபர்கள் அரிவாளால் தாக்கினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி ஆசிரியை மற்றும் அவரது கணவரை மர்மநபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாகவே வன்முறை தாண்டமாடுகிறது. நாள்தோறும் குறைந்தது நான்கைந்து கொலைகள், திருட்டுகள், என வன்முறைகள் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

School Teacher attack in Chennai

இதனால் ஏற்கனவே சென்னைவாசிகள் நடுக்கத்தில் உள்ள நிலையில், இன்று பள்ளி ஆசிரியை ஒருவரை தாக்கிய சம்பவமும் அரங்கேறி உள்ளது.

ஐஸ் அவுஸ் பகுதியை சேர்ந்த பள்ளி விஜயலட்சுமி.இவரது கணவர் சரவணன். இன்று மாலை இவர்களின் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் தம்பதி இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்ட ஆரம்பித்தனர். இதில் நிலைகுலைந்த கணவனும் மனைவியும் படுகாயமடைந்தனர்.

ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை நடந்து வருகிறது.

வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் யார், எதற்காக அரிவாளால் தாக்கினார்கள் என்ற விவரமெல்லாம் இனிமேல்தான் போலீசாரின் விசாரணையில் தெரியவரும். பட்டப்பகலிலேயே மர்மநபர்களின் இந்த வெறித்தன செயலால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+