வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று.. யுகேஜி சிறுவனை சரமாரியாக தாக்கிய ஆசியர்கள்! தாயார் கண்ணீர்
சென்னை: சென்னை கொளத்தூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் சிறுவனைச் சரமாரியாகத் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கொளத்தூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் யு.கே.ஜி படிக்கும் சிறுவன் முறையாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி, 3 ஆசிரியர்கள் கடந்த சனிக்கிழமை பள்ளிக்கு வர வைத்து அடித்து துன்புறுத்தியுள்ளார்கள்.

இதனால் அச்சிறுவனுக்கு மோசமான காயம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்த சிறுவன் தனியார் மருத்துவ மனையில் உள்ள ஐசியு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளான்.
இது குறித்து சிறுவனின் பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்ட போது அப்படியெல்லாம் எதுவும் நடக்கவில்லை என்றும் ஆசிரியர்கள் கண்டித்துள்ளார்கள் என்றும் கூறி மழுப்பி உள்ளனர்.
புதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..!
இதையடுத்து நீதி கேட்டு கொளத்தூர் காவல் நிலையத்தில் அவரது தாயார் புகார் அளித்துள்ளார். இருப்பினும், தனது புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியமாக இருந்து வருகிறார்கள் என்று சிறுவனின் தாயார் புகார் அளித்துள்ளனர்.
இருப்பினும், இதை மறுத்துள்ள போலீசார் சம்பந்தப்பட்ட ஆசிரியர்களைக் கைது செய்து விசாரணை நடத்தியதாகவும் அதன் பின்னரே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications