புதுப் பொலிவு பெறும் அங்கன்வாடிகள்.. எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடக்கம்..!
சென்னை: தமிழகத்தில் அரசு அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டன.
தமிழக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை எடப்பாடி பழனிச்சாமி அரசு செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக் கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தவண்ணம் உள்ளனர். அதில் ஒரு கட்டமாக இன்று அரசு அங்கன்வாடி பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கி வைக்கப்பட்டன.

தற்போது தனியார் நர்சரிப் பள்ளிகளில்தான் எல்கேஜி, யுகேஜி ஏன் ப்ரீகேஜி வகுப்புகள் கூட உள்ளன. இந்த நிலையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசுப் பள்ளிகளையும் மாற்றும் வகையில் கிண்டர்கார்டன் வகுப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது தமிழக அரசு.
சென்னை எழும்பூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதல் முறையாக பள்ளி கல்வித்துறை சமூகநலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பள்ளி கல்விதுறை அமைச்சர் செங்கோட்டையன், சமூகநலம் மற்றும் சத்துணவு துறை அமைச்சர் சரோஜா மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், விளம்பரம் மற்றும் செய்து தொடர்புதுறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கலந்து கொண்டு இத்திட்டத்தை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவியர்கள், மற்றும் ஆசிரிய பெருமக்கள் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் அங்கன்வாடி மையங்களில் பள்ளிக்கல்வித்துறை சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை ஒருங்கிணைப்புடன் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது.
2381 அங்கன்வாடி மையங்களில் துவங்கப்பட்ட உள்ள எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புக்கள் மூலம் 52,932 குழந்தைகள் பயன்பெறுவார்கள். நிகழ்ச்சியில் மாணவ மாணவர்களுக்கு பள்ளி சீருடை, பாட புத்தகம் ஆகிய கல்வி உபகரணங்களை முதல்வர் வழங்கினார்.
-
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
வன்னி அரசு வந்ததும் வராததுமா செய்த வேலை.. அரசு அதிகாரிகள் பங்கேற்ற தாட்கோ கூட்டத்தில் என்ன நடந்தது -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications