தமிழகத்தில் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடக்கம்! மாணவர்கள் மகிழ்ச்சி
சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்று முதல் காலாண்டு விடுமுறை தொடங்கியது. இதையடுத்து பள்ளிகள் வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி முதல் தொடங்கப்படுகிறது.
பள்ளிக் கல்வித் துறையின் நாட்காட்டியின்படி கடந்த 19ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடந்தது. இந்தத் தேர்வு நேற்றுடன் நடந்து முடிந்தது. காலாண்டு தேர்வு தொடங்குவதற்கு முன்பே 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டது.

அக்டோபர் 3ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ஆசிரியர் சங்கங்கள் வைத்த கோரிக்கையை ஏற்று காலாண்டு விடுமுறையை பள்ளிக் கல்வித் துறை நீட்டித்தது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கான காலாண்டு விடுமுறை 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாகவும், 7ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த உத்தரவை அடுத்து 9 நாட்கள் காலாண்டு விடுமுறை இன்று முதல் தொடங்குகிறது. இதை பயன்படுத்தி சென்னையில் சில பள்ளிகள் இன்று முதல் 4ஆம் தேதி வரை சில குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகளை நடத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுகுறித்து உறுதிப்பட தெரியவில்லை.












Click it and Unblock the Notifications