‛யம்மாடியோவ்’.. 176 ஆண்டுகளில் இல்லாத வெயில்! வாரி சுருட்டிய ஜூன்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வெயில் மே முழுவதும் வாட்டி வதைக்க தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதமே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. சரியாக சொல்வதெனில் பிப்ரவரி இறுதியிலிருந்தே வெயில் கொளுத்தியது. தென்னிந்தியாவும் சரி, வட இந்தியாவும் சரி ஒட்டு மொத்த நாடே வெயிலால் கடுமையான அவஸ்தையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டியது.

இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்தது. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தொடங்கி, அன்றாட கூலி தொழில் செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பலர் வெயிலால் ஏற்படும் அக்கி, அம்மை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர் வெயிலால் மயக்கமடைந்து உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிந்தது.
இந்நிலையில், சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.89 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதாவது இது கடந்த 174 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையைவிட அதிகமாகும். இதே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது 0.23 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்திருந்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல்களின் அளவானது உயர்ந்தது. அண்டார்டிகாவில் பனி பாறைகளின் அளவு குறைந்தது.
இது பல இடங்களில் வெள்ளம், எதிர்பாராத பருவநிலை மாற்றம், திடீர் மழை, திடீர் வெயில், சூறாவளி, புயல் என முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படும். இது மனித சமூகத்திற்கு மட்டுமல்லாது, பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications