‛யம்மாடியோவ்’.. 176 ஆண்டுகளில் இல்லாத வெயில்! வாரி சுருட்டிய ஜூன்.. வெளியான ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) தெரிவித்துள்ளது.
வழக்கமாக ஏப்ரல் மாதம் தொடங்கும் வெயில் மே முழுவதும் வாட்டி வதைக்க தொடங்கும். ஆனால் இந்த முறை மார்ச் மாதமே வெயில் வாட்ட தொடங்கிவிட்டது. சரியாக சொல்வதெனில் பிப்ரவரி இறுதியிலிருந்தே வெயில் கொளுத்தியது. தென்னிந்தியாவும் சரி, வட இந்தியாவும் சரி ஒட்டு மொத்த நாடே வெயிலால் கடுமையான அவஸ்தையை எதிர்கொண்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் சுமார் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெயில் வாட்டியது.

இது மக்களின் அன்றாட வாழ்க்கையை பெரிய அளவில் பாதித்தது. ஐடி நிறுவனங்களில் வேலைக்கு செல்வோர் தொடங்கி, அன்றாட கூலி தொழில் செய்பவர்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டனர். பலர் வெயிலால் ஏற்படும் அக்கி, அம்மை உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டனர். இன்னும் ஒருபடி மேலே சென்று சிலர் வெயிலால் மயக்கமடைந்து உயிரிழந்தனர். உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக தெரிந்தது.
இந்நிலையில், சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு (என்ஓஏஏ) அதிர்ச்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, தமிழ்நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் கடந்த ஜூன் மாதத்தில் 174 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பநிலை பதிவாகியுள்ளதாக கூறியுள்ளது.
ஜூன் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 20ம் நூற்றாண்டின் சராசரி வெப்பநிலையை விட 1.89 டிகிரி டிகிரி ஃபாரன்ஹீட் அதிகமாகப் பதிவாகியுள்ளது. அதாவது இது கடந்த 174 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வெப்பநிலையைவிட அதிகமாகும். இதே கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தில் இது 0.23 டிகிரி ஃபாரன்ஹீட்டாக அதிகரித்திருந்தது. இதன் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பெருங்கடல்களின் அளவானது உயர்ந்தது. அண்டார்டிகாவில் பனி பாறைகளின் அளவு குறைந்தது.
இது பல இடங்களில் வெள்ளம், எதிர்பாராத பருவநிலை மாற்றம், திடீர் மழை, திடீர் வெயில், சூறாவளி, புயல் என முன்கூட்டியே கணிக்க முடியாத வானிலை மாற்றங்கள் ஏற்படும். இது மனித சமூகத்திற்கு மட்டுமல்லாது, பறவைகள், விலங்குகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று சர்வதேச பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆய்வு அமைப்பு கூறியுள்ளது.
-
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு!












Click it and Unblock the Notifications