நிர்வாணமாக இழுத்து சென்று 2 பெண்கள் பலாத்காரம்.. குஜராத்தாக மாறும் மணிப்பூர்.. எஸ்டிபிஐ கண்டனம்
சென்னை: மணிப்பூரில் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டு கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட குக்கி பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் யாஸ்மின் ஃபரூக்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். மனிதாபிமானமற்ற மற்றும் நாகரீக சமுதாயத்திற்கு பொருத்தமற்ற கொடுமை இது என்றும் அவர் கூறினார். நாட்டில் வலதுசாரி பாசிஸ்டுகளால் பெண்ணின் கண்ணியம் சீரழிக்கப்படுகிறது என்று தனது கடும் கண்டனத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

பாஜக ஆளும் மணிப்பூரில் மே 4 ஆம் தேதி நடந்த மிகவும்சென்னை: மணிப்பூரில் நிர்வாணமாக அணிவகுக்கப்பட்டு கும்பல் பலாத்காரம் செய்யப்பட்ட குக்கி பழங்குடியின பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதற்கு எஸ்டிபிஐ கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இழிவான சம்பவம், ஜூலை 19 அன்று வைரலான ஒரு வீடியோவுக்குப் பிறகு பொது கவனத்திற்கு வந்தது, ஒரு பெரிய கும்பல் இரண்டு குக்கி சமூக பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக நெல் வயல் நோக்கி அணிவகுத்துச் செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது.
மணிப்பூர் வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. வீடுகளை இழந்த மக்கள் நிவாரண முகாம்களில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த அதிகாரிகளின் நேர்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு மணிப்பூரில் நடந்து வரும் இனக்கலவரம் குறித்து மிகவும் கண்டிக்கத்தக்க மௌனத்தைக் கடைப்பிடித்து வருகின்றது.
குக்கி சமூக பழங்குடியினப் பெண்களுக்கு நிகழ்த்தப்பட்ட அநீதிக்கு எதிராக, சம்பவத்தின் பின்னணியில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் சட்டத்தின் முன் கொண்டு வரப்பட்டு, அத்தகைய கொடூர குற்றவாளிகளில் முன்மாதிரியாக தண்டிக்கப்பட வேண்டிய தருணம் இது என்றும் யாஸ்மின் ஃபரூக்கி கூறினார். வடகிழக்கு மாநிலங்களில் மணிப்பூரில் பாஜக ஆட்சி நிகழ்ந்து வருகிறது. இங்கு மைத்தேயி எனும் சமூகத்தினர் அதிகளவில் வசித்து வருகிறார்கள். இவர்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குகி சமூகத்தினர் கடந்த மே 3 ஆம் தேதி பாதயாத்திரை மேற்கொண்ட போது இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 100 க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் மணிப்பூர் மாநில ஆளுநர் அனுசுயா உய்கே, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்திருந்தார்.
பல்வேறு இடங்களில் தொடர்ந்து வன்முறை, கலவரங்கள் ஏற்பட்டு பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மணிப்பூரில் கேங்போக்பி மாவட்டத்தில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர்கள் ஆடைகளை களைந்து சாலையில் இழுத்து சென்றனர். அங்கு அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தனர். அதை தடுக்க சென்ற அந்த பெண்களின் தந்தை, சகோதரர் ஆகியோர் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications