“ஏய் பயங்கரவாதி”.. முஸ்லிம் எம்பியை நாடாளுமன்றத்தில் திட்டிய பாஜக எம்பி! ஆக்ஷன் கோரும் எஸ்டிபிஐ
சென்னை: நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்பியை பயங்கரவாதி என்று பேசிய பாஜக எம்பி ரமேஷ் பிதுரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், "இந்திய பாராளுமன்றம் அதன் உறுப்பினர்கள் தங்கள் அரசியல் எதிரிகளுக்கு எதிராக, உயர்ந்த கண்ணியம் மற்றும் ஒழுக்கத்தைப் பின்பற்றும் இடமாக இருந்து வருகிறது. ஆனால், எதிர்க்கும் எவரையும் மதிக்காத பாஜக, ஜனநாயகத்தின் பிரதான மையத்தை துர்நாற்றம் வீசும் தெருவாகச் சீரழித்துவிட்டது.

பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி டேனிஷ் அலிக்கு எதிராக, பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதுரி, வகுப்புவாத அவதூறுகளை வீசி மிகவும் இழிவான சொற்களைக் கொண்டு வெறுப்புப் பேச்சு பேசிய சம்பவம் நாட்டின் ஜனநாயக மையத்தின் புனிதத்தை ஒரு புதிய தாழ்வு நிலைக்கு தள்ளியுள்ளது.
ஆளும் கட்சி எம்.பி.யின் இந்த வெறுப்பு வார்த்தைப் பிரயோகத்தை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது என்று எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் பி.எம்.காம்ப்ளே தெரிவித்தார். பாஜக எம்பி ரமேஷ் பிதுரி, டேனிஷ் அலி எம்பிக்கு எதிராக அவதூறான வார்த்தைகளால் இழிவு செய்தது தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக மட்டும் அல்ல, மாறாக அது நாட்டின் மிகப்பெரிய சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களின் கண்ணியத்தின் மீதான தாக்குதல் ஆகும்.
பாராளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலியை பயங்கரவாதி என்று கூறியது மட்டுமின்றி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாஜக எம்.பி. கேவலமாக பேசியுள்ளார். தவறாக நடந்து கொண்ட எம்.பி.க்கு எச்சரிக்கை மட்டும் கொடுத்து விட்டு சபாநாயகர் அந்த விவகாரத்தை கை கழுவிவிட்டார்.
இந்த இழிவான செயல் நடந்தேறும்போது பிதுரியின் பின்னால் இருந்து மூத்த பாஜக எம்பிக்கள் சிரிப்பது சம்பவத்தை மோசமாக்குகின்றன. ஆளும் கட்சி உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பாளர்களுக்கு எதிராக பாராளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகளை பேசும் இடமாக இப்போது பாராளுமன்றம் மாறிவிட்டது.
நாடாளுமன்ற பதிவுகளில் இருந்து இழிவான கருத்துகளை நீக்குவது, அல்லது பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங் மன்னிப்பு கேட்பது அல்லது குற்றவாளிகளுக்கு கட்சித் தலைவர் வழங்கிய காரணம் கோரும் நோட்டீஸ் ஆகியவை சேதத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையே தவிர வேறில்லை.
இந்திய முஸ்லிம்களின் கண்ணியத்தை காயப்படுத்தியது மட்டுமின்றி, ஜனநாயகக் கொள்கைகளையும், பாராளுமன்ற கண்ணியத்தையும் அவமதித்த பாஜக எம்பி மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற கீழ்த்தரமான நடத்தைக்காக பாஜக எம்பி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்; இல்லையேல் நாடாளுமன்றம் இனி வரும் நாட்களில் தனது மரியாதையை இழக்கும் அபாயம் ஏற்படும் என்றும் காம்ப்ளே தெரிவித்தார்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை!










Click it and Unblock the Notifications