ஏஆர் ரஹ்மான் கச்சேரி குழப்பம்.. அதில் "ஒரு சதி" இருக்கலாம்! எஸ்டிபிஐ சொல்லும் புதிய கோணம்
சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் மீதான தொடர் விமர்சனங்களை பார்த்தால் சதியையே வலதுசாரிகள் செய்து இருப்பார்களோ என சந்தேகம் எழுவதாக எஸ்டிபிஐ கட்சி தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநில தலைவர் நெர்ல்லி பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் சரிவர திட்டமிடாத செயல்கள் காரணமாக ஏற்பட்ட குளறுபடிகள், நெரிசல்கள் பெரும் விவாதமாகி கொண்டிருக்கின்றன.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடும் ஒரு நிகழ்ச்சியில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் இத்தகைய திட்டமிடாத செயல் ஏற்புடையதல்ல. இருப்பினும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல்களால் நிகழ்ந்த குளறுபடிகள் மற்றும் மக்களின் வேதனைகளுக்கு தான் பொறுப்பேற்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடிகளுக்கு தான் பொறுப்பேற்றுக் கொண்டது ஏ.ஆர்.ரஹ்மானின் பெருந்தன்மையை காட்டுகிறது. மேற்கண்ட இசை நிகழ்ச்சியின் அனைத்து குளறுபடிகளுக்கும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் செயல்களே காரணம் என தெரியவந்த பின்னரும், ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களை மதரீதியில் விமர்சித்து வெறுப்பினை கக்கும் செயல் கண்டிக்கத்தக்கது.
கலைத் துறையில் சர்வதேச அளவில் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கும் இசைக் கலைஞன் மீது மத ரீதியாக வெறுப்பினை கக்கும் விசமத்தனத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும். ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் மீதான வெறுப்புக்கு காரணம், சமீப காலமாக அவர் நாட்டில் பரவிவரும் வெறுப்புக்கு எதிராகவும், இந்தி திணிப்புக்கு எதிராகவும், தமிழுக்கு ஆதரவாகவும் மேற்கொள்ளும் நடவடிக்கைகளே காரணம்.
சர்வதேச அளவில் தேசத்திற்கு பெருமை சேர்க்கும் போது பொதுவான கலைஞனாக தெரிந்தவர்களுக்கு, தங்களின் வெறுப்பு நடவடிக்கைகளை எதிர்த்த பின்னர் அவர் ஆஸ்கர் நாயகனாக இருந்தாலும் ஒரு முஸ்லிமாக அடையாளம் காட்டப்பட்டு, அவதூறுகள் மூலம் அவர் மீது வெறுப்பை கக்கி வருகின்றனர். இத்தகைய வெறுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழகம் ஒருபோதும் ஆட்பட்டு விடக்கூடாது. பாசிசம் எந்த வழியில் வந்தாலும் அதனை தமிழர்கள் அனுமதிக்கக் கூடாது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
அதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் உமர் பாரூக் பேஸ்புக்கில் பதிவிட்டு இருப்பதாவது, "சங்கிகள் பார்வையில்...!? உலக அரங்கில் சாதனையின் உச்சம் தொட்டு இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்,ரஹ்மான். மதம் கடந்து, மொழி கடந்து சர்ச்சைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு விளங்கும் ஒருவரை எதைக்கொண்டு வதைக்கலாம் என ஏங்கிய மதவெறி கும்பல் அவரால் நிகழாத போதும் பெருந்தன்மையாக அவரே பொறுப்பேற்ற பின்னும், மனம் வருந்தி கவலையில் உள்ள நிலையில் மனிதாபிமானத்துடன் சில நகர்வுகளை முன்னெடுத்த நிலையிலும் வன்மத்துடன் வம்பிழுக்கும் சங்கிகளின் சண்டாளத்தனத்தை வன்மையாக கண்டிப்போம்.
அவர் உச்சம் தொட்ட முஸ்லிம் என்பதாலேயே கயமை கருத்துக்களை அள்ளி வீசுவதை பார்த்தால், சதி சங்கிகள் மூலம் நிகழ்ந்திருக்குமோ என அஞ்சத் தோன்றுகிறது." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
Gold Price: தங்கம் விலை ரூ.2 லட்சத்தை தொடப் போகுது.. இனி குறையவே குறையாது.. உச்சம் தான்! சலானி எச்சரிக்கை -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications