Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த சோதனை.. சிக்கியது என்ன? அமலாக்கத்துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் கடந்த 3 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது கைப்பற்றட்டது என்ன என்பது குறித்து அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படும் போது உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் பாலாஜி, காவேரி மருத்துவமனையில் நீதிமன்ற அனுமதியுடன் சிகிச்சை பெற்றார். மருத்துவமனையில் அவருக்கு பைபாஸ் சர்ஜரி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

Search operations nine locations linked to Senthil Balaji, what has been found and seized - ED

சிகிச்சைக்கு பிறகு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த செந்தில் பாலாஜி, உடல் நலம் தேறியதையடுத்து கடந்த... தேதி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது நீதிமன்றக் காவலில் செந்தில் பாலாஜி சிறையில் இருக்கிறார். அவரது கைது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒரு பக்கம் தொடர்ந்து நடக்கும் நிலையில், மறுபுறம் பல பரபர சம்பவங்கள் நடந்து வருகிறது.

அந்த வகையில், கடந்த வியாழக்கிழமை திண்டுக்கல் வேடசந்தூரில் உள்ள திமுக ஒன்றிய செயலாளர் வீரா எஸ்.டி சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. இவருக்கு சொந்தமான நிதி நிறுவனங்கள், புஷ்பத்தூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இவர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர் என கூறப்பட்டது.

சாமிநாதனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை முடிந்த மறுநாளே, அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கரூரில் உள்ள சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அன்றைய தினம் மாலை சங்கர் இல்லம் மற்றும் நிதி நிறுவனம் ஆகியவற்றில் சோதனை நிறைவு பெற்றது. 24 மணி நேரத்திற்கு மேலாக தனலட்சுமி மார்பிள்ஸ் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற சோதனை நேற்று காலை முடிவுக்கு வந்தது.

பிற்பகலில் லக்கி டிரேடர்ஸ் உரிமையாளர் செந்திலுடன் விஎஸ்பி அறக்கட்டளை அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை சென்று சோதனை நடத்தினர். செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த இரண்டு தினங்களாக விடிய நடைபெற்ற சோதனை நேற்று நள்ளிரவு நிறைவு பெற்றது. இந்த நிலையில், சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் விவரங்களை அமலாக்கத்துறை பகிர்ந்துள்ளது. அமலாக்கத்துறை கூறியிருப்பதாவது:-

கடந்த 3 ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையின் போது ரூ.22 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத ரொக்கம் மற்றும் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கணக்கில் வராத பொருட்களும் ரூ.60 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+