ஒரே "அடி"யில் 2 மாங்காய்.. அதிமுகவை மட்டுமல்ல.. தேமுதிகவையும் சேர்த்து காலி செய்யும் அதிரடி திட்டம்!
தேமுதிக அதிமுக கூட்டணியில் இருந்து விலக யார் காரணம் என்ற பேச்சு எழுந்துள்ளது
சென்னை: அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகியது தொடர்பாக பல சமாச்சாரங்கள் அலசப்படுகின்றன... நேற்றில் இருந்து இது ஒரு விவாதமாகவே சோஷியல் மீடியாவில் எழுந்து வருகின்றது..!
தேமுதிகவை பொறுத்தவரை எதையும் மறைமுகமாக செய்யவில்லை.. பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைக்கவில்லை என்பது முதல் சுதீஷ் பேசிய பேச்சுக்கள் வரை எல்லாமே ஓபனாகவே நடந்தது.. இறுதியில் அதிருப்தி அடைந்தது.
அதற்கு காரணம், எதிர்பார்த்த சீட் கிடைக்கவில்லை, வாய் விட்டு கேட்டும் சீட் கிடைக்கவில்லை.. என்பது தேமுதிகவின் வாதம்... மேலும் பாமகவுக்கு ஒதுக்கிய தொகுதிகளில் தேமுதிகவுக்கு சாதகமான தொகுதிகளும் அடங்கிவிட்டதாக தேமுதிக கருதியது.

2 காரணங்கள்
பல பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற நிலையில், கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதையடுத்து, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும்? அல்லது நிஜமாகவே தனித்து களம் காணுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.. அதேசமயம், தேமுதிகவை மறைமுகமாக அதிமுக அணியிலிருந்து சிலர் வெளியேற்றியுள்ளதாகவே கருதுகிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதற்கு 2 காரணங்கள் இருப்பதாகவும் அவர்கள் சொல்கிறார்கள்.

கணக்கு
ஒரு காரணம், தேமுதிகவை வெளியேற்றி மறைமுகமாக அதிமுகவை பலவீனப்படுத்துவது.. அதாவது அதிமுகவுக்கு என்று தனித்தன்மை, தனி மெஜாரிட்டி, கிடைத்துவிடக்கூடாது என்பதுதான்.. கிட்டத்தட்ட மெஜாரிட்டி இல்லாத தொங்கு அரசாக அமைந்துவிட்டால், தங்களுக்கு லாபம் என்று சிலர் கணக்கு போடுகிறார்கள்.. அதனாலேயே அளவுக்கு அதிகமாக அதிமுக வளர்ந்து விடக்கூடாது என்பதிலும் கவனத்துடன் காய் நகர்த்தல்கள் நடந்து வருகின்றன. எனவே, தேமுதிகவை கூட்டணியில் இருந்து விலக்கிவிட்டால், அதிமுகவின் பலம் குறையும் என்ற கணக்கு போடப்படுகிறது.

தேமுதிக
2வது காரணம், தேமுதிகவையும் சேர்த்து காலி செய்வது என்பது இன்னொரு ரகசிய திட்டம். என்று இருந்தாலும் தேமுதிக ஒரு சக்தியாகவே இருக்கிறது. அதற்கும் தனியாக பிளான் போட வேண்டியுள்ளது. இதனால் தேமுதிகவையும் மேலும் பலவீனப்படுத்துவது. அதாவது அதிமுக அணியிலும் இடம் இல்லாமல், திமுகவுடனும் சேர முடியாமல் வேறு ஏதாவது சப்பை அணியுடன்தான் தேமுதிக சேர்ந்தாக வேண்டும் அல்லது தனித்து போட்டியிட வேண்டும் என்பது.

நிலைமை
அதிமுக, பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டே லோக்சபா தேர்தலில் இந்தக் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் 3 சதவீதத்திற்கும் கீழ்தான்.. இப்போது நிலைமே இன்னும் மோசம்.. இந்த தேர்தலில் ஒரு சதவீதம் வாக்குகள் கிடைத்தாலே பெரிய விஷயம்தான். விஜயகாந்த்துக்கும் பிரச்சாரம் செய்ய முடியாது.. மக்களிடம் செல்வாக்கு இல்லை.. இருக்கும் கொஞ்ச நஞ்ச பெயரையும் சுதீஷூம், விஜய பிரபாகரனும் பிரச்சாரங்களில் பேசி பேசியே கெடுத்து கொள்ளக்கூடும்.

சின்னம்
இதுபோக, தங்களுடைய கட்சி, சின்னம், போன்றவைகளின் அங்கீகாரத்தை பெற வேண்டிய கட்டாயமும் அக்கட்சிக்கு உள்ளது.. அதனால் கூட்டணியில் சேர்த்தாலும் சரி, தொகுதிகளை ஒதுக்கினாலும் சரி, எதிர்பார்த்த வெற்றியை தேமுதிகவால் பெற முடியாமல் போய்விடும்.. இதனால் கூட்டணியும் பாதிக்கும்.. அதனாலேயே தேமுதிக நிரந்தரமாக காலியாகி விடும் என்பது அவர்களை வெளியேற்றிய சக்தியின் மறைமுகத் திட்டம் என கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் தேமுதிக இல்லாமல் அதிமுகவும் பலவீனமாகியிருக்கிறது... எனவே ஒரு சேர அதிமுக, தேமுதிக இரண்டையும் காலி செய்யும் திட்டமே இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!












Click it and Unblock the Notifications