சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சென்னையில் ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு: காவல் ஆணையர் அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஏப்ரல் 30-ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஏப்ரல் 30ம் தேதி வரை 144 உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Section 144 on Chennai till 30 midnight on April 30

முன்னதாக கொரோனா நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144 (4) மற்றும் பிரிவு 20 (2) ஆகியவை கடந்த 24 -ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு புதன்கிழமை (1.4.2020) காலை 6 மணி வரை அமலில் இருந்தது. இதையடுத்து காவல் ஆணையா் ஏ.கே.விசுவநாதன் 144 தடை உத்தரவை, மேலும் 14 நாள்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதன்படி ஏப்ரல் 15-ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவுவதை தடுப்பதற்காக ஏப்ரல் 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டித்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின் மூலம், பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டவா்கள் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவை மீறுபவா்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2 நாளில் நம்பிக்கை அளித்த மாற்றங்கள்.. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாததுக்கு இதுவே காரணம்! 2 நாளில் நம்பிக்கை அளித்த மாற்றங்கள்.. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாததுக்கு இதுவே காரணம்!

இதனிடையே முன்னதாக, பேரிடா் மேலாண்மைச் சட்டம் 10 (2) (1) பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், பேரிடா் மேலாண்மைச் சட்டம் 10 (2) (1) பிரிவின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த கடந்த 25-ஆம் தேதி முதல் 21 நாள்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த உத்தரவை மே 3ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

English summary
Section 144 on Chennai till 30 midnight on April 30: Chennai Metropolitan Police Commissioner AK Viswanathan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X