உலகை ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கு..இன்னொருவர் மூளைக்கு வேலை செய்ய முடியாது: பிகே குறித்து சீமான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: உலகையே ஆளும் அறிவு எங்களுக்கு இருக்கிறது; நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் இல்லை என தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் குறித்த கேள்விக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதில் அளித்துள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சீமான் சந்தித்தார்.

Seeman Comments on Prashant Kishor works with DMK

இச்சந்திப்பின் போது, பிரஷாந்த் கிஷோர் போன்று தேர்தல் வியூக வல்லுநர் ஒருவரை நாம் தமிழர் கட்சி நியமிக்குமா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீமான் அளித்த பதில்:

உலகையே ஆளுகிற அறிவு எங்களுக்கு இருக்கிறது. நாங்கள் ஒன்றும் அறிவின்மை கொண்டவர்கள் அல்ல. இன்னொருவர் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது.

உள்ளத்தூய்மையுடன் மக்களுக்கு சேவை புரிய வந்துள்ளோம். திமுக இதனை செய்திருந்தால் பிரஷாந்த் கிஷோர் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்காது. தங்கள் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் இன்னொருவரை திமுக கூலிக்கு வைத்துள்ளது.

இவ்வாறு சீமான் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+