Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க சொன்னா நான் பெத்துக்கணுமா? 3 புள்ளைய பெத்து யாரு வளர்ப்பா? மோகன் பாகவத்துக்கு சீமான் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னு சொன்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தையை யார் வளர்ப்பா என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் சீமான் மேலும் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: உணவு, உடை, மதம், வழிபாடு, குழந்தை பெற்றுக் கொள்ளுதல் எல்லாம் தனிமனித உரிமை. இதையெல்லாம் சேர்த்துதான் சுதந்திரம் என்று சொல்கிறோம்.

seeman mohan bhagwat

நீங்கள் 3 குழந்தை பெத்துக்கணும்னா நான் பெத்துக்கணுமா? அந்த குழந்தைகளுக்கு சோறு நீங்கள் போடுவியா? அந்த குழந்தைக்கு படிப்பு யாரு கொடுப்பா? கல்வி, மருத்துவம், மின் உற்பத்தி விநியோகம், துறைமுகம், விமான நிலையம் உள்ளிட்டவை எல்லாம் தனியார்மயமாகிவிட்டது.

3 பிள்ளையை பெத்து யார் வளர்ப்பா? நாம் இருவர் நமக்கு இருவர்னு கொண்டு வந்தது யார், நாம் இருவர் நமக்கு ஒருவர்னு கொண்டு வந்தது யார், நாம் இருவர் நமக்கேன் இன்னொருவர் என சொன்ன போது நீங்கள் என்ன செய்துக் கொண்டிருந்தீர்கள்.

இந்த 3 குழந்தைகளை இந்துக்கள் மட்டும் பெத்துக்கணுமா, இல்லை இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள அனுமதி இருக்கானு கேட்டுச் சொல்லுங்கள். அதுக்குனு தனி சட்டம் வந்தாலும் வரும். இதெல்லாம் ஒரு பிரச்சினையாகிவிட்டது. அவனவன் குடியிருக்க வீடு இல்லாமல் தார்பாயை கட்டித் தூங்கிக் கொண்டிருக்கிறான். 3 பிள்ளைய பெத்துக்கணுமாம், இவர் சொன்னா பெத்துக்கணுமா?

நாடெங்கும் மது, கணக்கில்லாத போதை பொருள் நடமாடிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்து 3 பிள்ளை பெத்துக்கிறது. நீட் வந்தால் மருத்துவ படிப்பில் கட்டண கொள்ளை ஒழியும் என்றார்களே, இப்போது மருத்துவ சீட் எவ்வளவு சொல்லுங்கள். ஒரு இட்லி 1000 ரூபாய், ஒரு கிலோ அரிசி ரூ 1000 வர வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், "ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் குறைந்தது மூன்று குழந்தைகளையாவது பெற்றுக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். மக்கள்தொகை குறைந்த சமூகம் அழிந்துவிடும் என்பதால், நாட்டின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்கு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

அவரது கருத்துக்களின் முக்கிய அம்சங்கள்

மக்கள்தொகை சமநிலை: ஒரு சமூகத்தின் கருவுறுதல் விகிதம் 2.1 சதவீதத்திற்கும் கீழ் குறைந்தால், அந்த சமூகம் தானாகவே அழிவை நோக்கிச் செல்லும் என்று மக்கள்தொகை அறிவியல் ஆய்வுகள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

இந்திய மக்கள்தொகைக் கொள்கை: இந்தியாவின் மக்கள்தொகைக் கொள்கையும் மொத்த பிறப்பு விகிதம் 2.1 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்துகிறது என்றும், எனவே ஒவ்வொரு தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்வது அவசியம் என்றும் அவர் கூறினார்.

சமூக வளர்ச்சி: சமூகத்தின் வளர்ச்சிக்கு குடும்பங்களின் பங்களிப்பு அவசியம், மற்றும் ஒரு சமூகம் நிலைத்திருக்க மக்கள் தொகை சமநிலை முக்கியம்.

இந்த கருத்துக்கள் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. சிலர் அவரது கருத்தை ஆதரித்தாலும், சிலர் மக்கள்தொகை கட்டுப்பாடு குறித்து பேசும் அரசாங்கக் கொள்கைகளுக்கு முரணாக அவரது கருத்து இருப்பதாக விமர்சித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+