Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பதி, சபரிமலையில் 'கை'வைத்துவிட்டு தமிழ்நாட்டு கோவில்களை எடுக்க வரலாம்...மோடிக்கு சீமான் பதிலடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டு கோவில்கள் குறித்து பேசும் பிரதமர் மோடி திருப்பதி, சபரிமலை கோவில்களை கையகப்படுத்திவிட்டு பின்னர் பேசலாம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியின் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

இது தொடர்பாக சீமான் சென்னையில் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: நாட்டில் எந்த பிரச்சனையும் இல்லையா அவருக்கு? மண்ணடியில் இருக்கிற காளிகாம்பாள் கோவிலுக்கு அறங்காவலர் நியமனத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு. உடனே எங்கே இருந்து பிரதமர் மோடி தமிழ்நாடு கோவில்களை அரசு ஆக்கிரமித்துள்ளது என பேசுகிறார் பாருங்க? நாட்டில் இது பிரச்சனையா அவருக்கு?

Seeman Refutes PM Modis Allegations on Temples Encroached By TN govt

கோவில்களையும் எடுங்க: நான் என்ன சொல்கிறேன்.. என் மாநில கோவில்களை நீங்க எடுங்க.. எல்லாத்தையும் நீங்களே எடுங்க.. கல்வியை எடுத்துட்டுப் போய் விற்றுவிட்டீர்கள். மருத்துவதுறையை எடுத்துக் கொண்டு போய் விற்றாச்சு.. குடிநீரை விற்றாச்சு.. தெருவோர சாலைகளைப் போட்டு 100 கி.மீக்கு ஒருத்தருக்கு டெண்டர் விட்டாச்சு.. இதனையும் எடுத்துக் கொண்டு போய் விற்றுவிடுங்களேன்..

அங்க கை வையுங்க... : ஆனால் மகாராசா, முதலில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலை எடுங்க.. அப்புறம் சபரிமலை ஐயப்பன் கோவிலை கேரளாவில் எடுங்க.. அவன் கொடுத்துவிட்டால் என் கோவிலையும் எடுத்துட்டு போங்க.. கை கட்டி நிற்கிறேன். எடுத்திருங்க பார்க்கலாம்? அப்படியே.... பஞ்சாப் பொற்கோவிலையும் எடுத்துடுங்க.. கொன்னே போடுவான்.. இதெல்லாம் மக்களுக்கு ஒரு பிரச்சனையா தம்பி? அரசு எங்ககிட்ட இருக்கும் போதே 2800 சிலைகளைக் காணவில்லை. எங்க போச்சுன்னு தெரியலை? இது ஒரு பிரச்சனையா?

காவிரியும் பிரதமர் மோடியும்: ஒருநாட்டின் பிரதமர் பேசுகிறார்.. காவிரி நதிநீருக்காக "இந்தியா" கூட்டணியில் இருக்கிற இரண்டு கட்சிகள் சண்டை போடுவதாக பிரதமர் மோடி பேசுகிறார்.காவிரி நீருக்கும் பிரதமர் மோடிக்கும் சம்மபந்தமே இல்லை? எங்களுக்கு அவர் பிரதமர் இல்லை? காவிரி நதிநீர் உரிமையை பெற்றுத் தரும் கடமை அவருக்கு இல்லை? எவ்வளவு பொறுப்பற்ற வார்த்தையை பேசுகிறார் பிரதமர் மோடி... போன முறை கர்நாடகாவில் பாஜக ஆட்சி செய்த போது காவிரி நீரை தர சொன்னீர்களா? தமிழரை அடித்து விரட்டியபோது தலையிட்டு தீர்வு கண்டீர்களா? எங்களுக்கு எல்லாம் வேறு ஒருவர் பிரதமர் இருப்பது போலவே பேசுகிறார்.. இவ்வாறு சீமான் பேசியதாக அந்த வீடியோ பகிரப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+