இத பத்தி பேசுவோமா.. கருணாநிதி க்யூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான்.. சீமான் கிளப்பிய விவகாரம்!
சென்னை: கருணாநிதி கியூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான், ஆட்சியில் இருப்பவர்கள் அடுத்தவர்களை பழிவாங்குவதற்காகவே விசாரணை அமைப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன என காட்டமாக விமர்சித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட அமலாக்கத்துறை சோதனைகளுக்குப் பிறகு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது நெஞ்சு வலிப்பதாக கதறி அழுத அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். விசாரணை அமைப்புகளை மத்திய பாஜக அரசு எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பயன்படுத்துவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான கைது நடவடிக்கை குறித்துப் பேசிய நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "இது ஜனநாயக நாடு, மக்களாட்சி கோட்பாட்டை கொண்ட ஒரு நாடு, அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்று நாம் நினைத்தோம். அப்படித்தான் கட்டமைத்தோம்.
தேர்தல் ஆணையம், நீதிமன்றம், வருமான வரித்துறை, மத்திய புலனாய்வுத்துறை, அமலாக்கத்துறை எல்லாம் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகள் என நினைத்தோம். அதிகாரம் தலையிடாது, சுதந்திரமாக இயங்கும் என நினைத்தோம். இப்போது அதெல்லாம் கிடையாது. இவை அனைத்தும் ஆட்சியில் இருப்பவர்களின் ஐந்து விரல்கள். அது நீட்டினால் நீட்டும், மடக்கினால் மடங்கும்.
என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டில் சோதனை வரும். ஏன் கைது பண்ணினார்கள், எதற்காக கைது பண்ணினார்கள் என வீட்டில்கூட சொல்லவேண்டியது இல்லை. இருட்டறையில் போட்டு சாகடிப்பதால்தான், சர்வாதிகாரம் எனச் சொல்லாமல் கொடுங்கோன்மை ஆட்சி என இதைச் சொல்கிறேன்.
பழிவாங்குவதற்காகத்தான் விசாரணை ஏஜென்சிகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். கருணாநிதி கியூ பிராஞ்ச் தொடங்கியதே பழிவாங்கத்தான். இலங்கை மக்களை சித்திரவதை செய்ய சிறப்பு முகாம் என பெயர் வைத்திருக்கிறார்கள். நாட்டில் ஜனநாயகம் எங்கும் இல்லை." என காட்டமாக விமர்சித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு என்று தனியாக ஒரு பிரிவு கருணாநிதி ஆட்சிகாலத்தில் ஏற்படுத்தப்பட்டது. கியூ பிராஞ்ச் அலுவலகம் டிஜிபி அலுவலகத்தில் இருக்கிறது. அதற்கு டிஐஜி தலைமையில் ஒரு தனி அதிகாரியும் இருக்கிறார். துணைப் பிரிவுகளும் இருக்கின்றன. க்யூ பிராஞ்ச் பிரிவு மாநில அரசின் முழுக் கட்டுப்பாட்டில், முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-
கோவை தெற்கில் ஒவ்வொரு வார்டிலும் 3 பட்டிகள்.. செந்தில் பாலாஜி மீது அதிமுக பரபரப்பு புகார் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை!












Click it and Unblock the Notifications