சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை.. போன மாசம் ஒரு பேச்சு.. இந்த மாசம் ஒரு பேச்சு! தவெக சம்பத் பதிலடி
சென்னை: தவெக தலைவர் விஜய் குறித்து காட்டமான விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். இந்நிலையில், விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை என தவெக மாநாட்டில் கொள்கைகளை வாசித்த சம்பத் குமார் கூறியுள்ளார்.
தவெக எனும் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு நேற்று முன் தினம் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி-சாலை பகுதியில் கோலாகலமாகவும் கொண்டாட்டமாகவும் நடந்தேறி இருக்கிறது. இந்த மாநாட்டில் சுமார் 3 லட்சம் பேர் வரை கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய், பெரியாரின் கடவுள் மறுப்பை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதே நேரத்தில் பகுத்தறிவு பெண்கள் முன்னேற்றம் சமூக நீதி ஆகியவை தங்களது கட்சியின் கொள்கைகளாக இருக்கும் என விஜய் கூறியிருந்தார்.
இது பல விமர்சங்களை பெற்றுள்ளது. பகுத்தறிவுக் கொள்கையில் முதலாவது கடவுள் மறுப்பு எனும் பெரியாரிய ஆதரவாளர்கள் விஜய் குழப்ப மனநிலையில் இருப்பதாக விமர்சிக்கின்றனர். அதே நேரத்தில் திராவிடமும், தமிழ் தேசியமும் எனது இரு கண்கள் என விஜய் கூறியிருந்தார். இதுகுறித்து பேசிய நாம் தமிழர் கட்சி சீமான், விஜயின் கருத்து கருவாட்டு சாம்பார் போல் உள்ளது என கூறினார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக சென்னையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான் விஜயை கடுமையாக விமர்சித்தார். கூட்டத்தில் பேசிய அவர்," விஜயை போல் நான் குட்டி கதை சொல்பவன் இல்லை வரலாற்றை கற்பிக்க வந்திருக்கிறேன் இது ஒரு பண்பாட்டு புரட்சி நீங்கள் இனிமேல் தான் பெரியார் அம்பேத்கரை படிக்க வேண்டும் நாங்கள் அதில் பிஹெச்டி வாங்கி விட்டோம்" எனவும் விமர்சித்தார்.
மேலும் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்," ஒன்னு கொள்கைய மாத்தனும், இல்லை எழுதி கொடுக்கிறவன மாத்தனும் ரெண்டையும் வச்சிகிட்டு குழப்பிட்டு இருக்கக்கூடாது, ஆளுநர் ஏன் வேண்டாம் என்று விளக்கம் கொடுக்க முடியுமா?, உன்னுடைய மொழிக் கொள்கை தப்பா இருக்கு, திராவிடமும், தமிழ் தேசியமும் தேவை என பேசுவதே தப்பா இருக்கு.. கூட்டம் எல்லாருக்கும் வரும், கடை திறப்பு விழாவுக்கு வந்த நயன்தாராவுக்கு 4 லட்சம் பேர் வந்தார்கள்" என கூறினார்.
இந்நிலையில், விஜயை விமர்சித்து சீமான் இதயத்திலிருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டுபோகவில்லை என தவெக மாநாட்டில் கொள்கைகளை வாசித்த சம்பத் குமார் கூறியுள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டுள்ள அவர்,"விஜயை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இதயத்தில் இருந்து பேசவில்லை என்பதால் நாங்கள் மூளைக்குள் கொண்டு போகவில்லை. மாநாட்டிற்கு முன்பு சீமான் பேசியதற்கும் மாநாட்டின் வெற்றிக்கு பின்பு சீமான் பேசியதற்கும் பெரிய வேறுபாடு உள்ளது.
இப்படி பேசுபவர்கள் ஒவ்வொருவருக்கும் பதில் கூறினால் எங்கள் பயணத்தின் வேகம் தடைபடும். யாரை விமர்சனம் செய்ய வேண்டும் யாரை கடந்து போக வேண்டும் என என்பதை விஜய் எங்களுக்கு உணர்த்தி உள்ளார்" என கூறியுள்ளார். இவர் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகளை விளக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications