தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளவில்லை.. வாக்களித்தபின் சீமான் ஆவேசம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது என்று சீமான் கூறினார்.

வாக்குப்பதிவு தீவிரம்
தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இது தவிர நடிகர்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாக்களித்தனர்.

ஸ்டாலின் வாக்குப்பதிவு
மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன், துரைமுருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாக்களித்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில்தனது வாக்கினை செலுத்தினார்.

சீமான் பேட்டி
சுமார் ஒரு மணி நேரம் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் சீமான். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சீமான் கூறியதாவது:- வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஓட்டுச்சீட்டு முறையையே கடைபிடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

பணப்பட்டுவாடா நடக்கிறது
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது. நமது மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றால் பிட் வைத்திருக்கிறார்களா என்று கம்மலில் கூட சோதனை செய்கின்றனர். ஆனால் கட்சிகளின் பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்று சீமான் கூறினார்.
-
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது












Click it and Unblock the Notifications