தேர்தல் ஆணையம் பணப்பட்டுவாடாவை கண்டுகொள்ளவில்லை.. வாக்களித்தபின் சீமான் ஆவேசம்!
சென்னை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது என்று சீமான் கூறினார்.

வாக்குப்பதிவு தீவிரம்
தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். இது தவிர நடிகர்கள் ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் வாக்களித்தனர்.

ஸ்டாலின் வாக்குப்பதிவு
மு.க.ஸ்டாலின், ஓ.பன்னீர்செல்வம், கமல்ஹாசன், துரைமுருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாக்களித்தனர். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வேளாங்கண்ணி பள்ளியில்தனது வாக்கினை செலுத்தினார்.

சீமான் பேட்டி
சுமார் ஒரு மணி நேரம் மக்களோடு, மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார் சீமான். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் சீமான் கூறியதாவது:- வளர்ந்த நாடுகள் அனைத்தும் ஓட்டுச்சீட்டு முறையையே கடைபிடிக்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் வாக்குப்பதிவு எந்திரம் பயன்படுத்தப்படுகிறது.

பணப்பட்டுவாடா நடக்கிறது
மனித கழிவை மனிதர்களே அள்ளும் நிலைக்கு முடிவு கட்ட முடியாத இந்தியா, வாக்குப்பதிவுக்கு எந்திரங்களை பயன்படுத்துகிறது. நமது மாணவிகள் நீட் தேர்வு எழுத சென்றால் பிட் வைத்திருக்கிறார்களா என்று கம்மலில் கூட சோதனை செய்கின்றனர். ஆனால் கட்சிகளின் பணப்பட்டுவாடா நடக்கிறது. இதை தடுக்க முடியவில்லை. பணப்பட்டுவாடாவை தேர்தல் ஆணையம் கண்டு கொள்ளவில்லை என்று சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications