குடியுரிமை மறுக்கப்பட்டால்.. ஒரு கவலையும் இல்லை ராஜா.. கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. சீமான் கிண்டல்
கைலாசா நாட்டுக்கு சென்று விடுவேன் என சீமான் தெரிவித்துள்ளார்
சென்னை: "எனக்கு குடியுரிமை மறுக்கப்பட்டால், ஒரு கவலையும் இல்லை ராஜா.. நேரா கைலாசா நாட்டுக்கு போய்டுவேன்.. அதிபர் நித்யானந்தாவும் அவரது கைலாசா நாடும் இருக்கவே இருக்கு" என்று சீமான் கிண்டலாக பேசினார்.
இந்திய குடியுரிமை சட்ட திருத்தம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியது.. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மாணவர்களும் எதிர்க்கட்சியினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

தமிழகத்திலும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.. அந்த வகையில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியும் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. வள்ளுவர் கோட்டத்தில் நடந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது அவர் சொன்னதாவது:
"நமக்கு ஒரு அரசாங்கம் அமைந்திருக்கு பாருங்க.. உலகத்துல எந்த இனத்துக்கும் இப்படி ஒரு அரசாங்கம் அமையாது.. வரலாற்றில் பெரும் பிழையை தொடர்ச்சியாக செய்து வருகிறது அதிமுக அரசு.. இதை ஏன் எதிர்க்கல.. எதிர்த்து வாக்கு செலுத்தியிருந்தால், இந்த மசோதாவே அங்கே நிறைவேறியிருக்காது.. இதை தடுத்திருக்கலாமே அதிமுக கட்சி" என்று சரமாரியாக பேசினார்.
தொடர்ந்து மத்திய, மாநில அரசை சாடி பேசும்போது, "எனக்கு குடியுரிமை இல்லைன்னு சொல்றீங்களா.. பாஸ்போர்ட்டை குடுத்துடுங்க.. ஒரு பிரச்சனையும் இல்லை ராஜா.. கைலாசான்னு ஒரு நாடு உருவாயிடுச்சு.. எங்களுக்கு அதிபர் நித்யானந்தாவும், அவரது கைலாசா நாடும் இருக்கு" என்று கிண்டலாக சொன்னதும் கூடியிருந்த பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
-
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications