Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாமியார் தலையை சீவுங்க! நான் 100 கோடி தரேன்! கசாப்பு கடைக்காரர் கணக்கா பேசுறாரே.. சீமான் கொந்தளிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் தலையை சீவ ரூ 10 கோடி அறிவித்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கோடி தருகிறேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக கோபத்தை கொப்பளித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது சனாதனம் குறித்த பிரச்சினை தேசிய அளவில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. உதயநிதி மீது மாநில காவல் நிலையங்களில் பாஜகவினரும் சனாதனவாதிகளும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினரும் இந்து அமைப்புகளும் புகார் கொடுத்த வண்ணம் உள்ளனர்.

 Seeman says he will give rs 100 crore for beheading Ayodhya seer

சனாதனம் என்பதை எதிர்க்கக் கூடாது, ஒழிக்க வேண்டும் என்றும் அவற்றை டெங்கு, கொரோனா, மலேரியா போல் ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் உதயநிதி சென்னையில் ஒரு மாநாட்டில் பேசியதுதான் இத்தனை பிரச்சினைகளுக்கு ஆரம்பமாக உள்ளது.

உதயநிதியின் இந்த கருத்துக்குத்தான் பாஜகவினர் உள்ளிட்டோர் எதிர் கருத்துகளை கூறி வருகிறார்கள். இந்த நிலையில்தான் அயோத்தியை சேர்ந்த சாமியார் பரமஹம்ச ஆச்சாரியா என்பவர்தான் உதயநிதியின் தலைக்கு ரூ 10 கோடி கொடுப்பதாக கூறியுள்ளார். மேலும் உதயநிதியின் புகைப்படத்தை வாளால் கிழித்து அதை கொளுத்தியும் வீடியோ வெளியிட்டிருந்தார்.

இதற்கு உதயநிதி பதிலளிக்கையில் என் தலையை சீவ எதுக்கு ரூ 10 கோடி , 10 ரூபா சீப்பு இருந்தால் போதுமே என நக்கலடித்திருந்தார். இந்த நிலையில் 10 கோடி சன்மானத்தை அயோத்தி சாமியார் அதிகரிக்கவும் தயார் என முறைத்தபடியே தெரிவித்திருந்தார். இதையடுத்து தமிழகத்தில் அயோத்தி சாமியாரின் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ந்து வருகிறது.

ஆங்காங்கே உதயநிதியை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. சாமியாருக்கு கண்டனங்கள் குவிகின்றன. ஒரு அமைச்சரை சாமியார் மிரட்டுவதா அவரை கைது செய்ய வேண்டும் என்ற குரல்கள் கேட்கின்றன. இந்த நிலையில் சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.

 Seeman says he will give rs 100 crore for beheading Ayodhya seer

அப்போது அவர், அவர்களுடைய நாட்டுக்கு பாரத் என வைத்துக் கொள்கிறார்கள். எங்கள் நாடு தமிழ்நாடுதான். ஒரே நாடு என்றால் கர்நாடகா ஏன் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுக்கிறது என கேள்வி எழுப்பினார். மேலும் அவரிடம் உதயநிதிக்கு சாமியார் விடுத்த மிரட்டல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சீமான் கூறுகையில் தம்பி உதயநிதியின் தலையை சீவ ரூ 10 கோடியை சாமியார் சன்மானமாக அறிவித்திருந்தார். இப்போது நான் அறிவிக்கிறேன், அந்த சாமியாரின் தலையை சீவினால் நான் ரூ 100 கேடி தருகிறேன். நாக்கை வெட்டுவது, தலையை வெட்டுவது என பேசுகிறாரே இவர் என்ன சாமியாரா இல்லை கசாப்புகடைக்காரரா என கேள்வி எழுப்பியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+