சாதி இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் அகற்ற போராடிய போராட்டக்காரர் பெரியார்: சீமான், வேல்முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடாற்றிய போராட்டக்காரர் தந்தை பெரியார் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

Seeman tweets on Thanthai Periyar 47th death anniversary

தந்தை பெரியாரின் 47-வது நினைவுதினம் இன்று. தந்தை பெரியாரின் நினைவுநாளில் தமிழக தலைவர்கள் அவரை நினைவுகூர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: சாதிய இழிவு, தீண்டாமை, பெண்ணிய அடிமைத்தனம் இவற்றை அறவே அகற்ற அரும்பாடற்றிய போராட்டக்காரர்!

மானமும் அறிவும் மனிதருக்கு அழகு! மானமில்லாதவனை மனிதனாகவே ஏற்க முடியாது என்று மான உணர்வூட்டிய மாமனிதர்! ஐயா பெரியார் அவர்களின் நினைவைப் போற்றுவோம்! இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் பண்ருட்டி தி. வேல்முருகன்: மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு.என்று சொன்ன பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+