கொரோனா பிடியில் தாராவி தமிழர்கள்.. தமிழகத்துக்கு பாதுகாப்பாக அனுப்ப வேண்டும்- சீமான்
சென்னை: கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கியுள்ள மகாராஷ்டிராவின் தாராவி பகுதி தமிழர்களை தமிழகத்துக்கு அம்மாநில அரசு பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:
மராட்டியத்தில் கொரோனோ நோய்த்தொற்றுப் பாதிப்பு அபரிமிதமாகியுள்ள நிலையில் ஆசியாவின் மிகப்பெரும் குடிசைப்பகுதியாகத் திகழும் தாராவி மக்களின் வாழ்நிலை பெருங்கவலையைத் தருகிறது. சமூகப்பரவல் வீரியமாகியுள்ள நிலையில் தாராவியில் நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 859 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 29 ஆகவும் இருப்பது அங்கு வாழும் அடித்தட்டு உழைக்கும் மக்களிடையே பெருத்த அச்சத்தை உருவாக்கியிருக்கிறது.
சராசரியாக ஒரு கழிப்பிடத்தை 400 பேருக்கு மேல் பயன்படுத்துகிற நிலையிலுள்ள தாராவியில் நோய்த்தொற்று பரவலைத் தடுக்க மிகுந்த முன்னேற்பாடுகளும், அதிதீவிர நடவடிக்கைகளும் அவசியமாகிறது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களாகச் சென்று நோய்த்தொற்று பரவலால் மராட்டியத்தில் சிக்குண்டு தாய்நிலம் திரும்ப முடியாது தவித்து வரும் தமிழர்களை உடனடியாகத் தமிழகத்திற்குத் திருப்பியனுப்ப வேண்டியது பேரவசியமாகிறது.
மராட்டியத்தில் நோய்த்தொற்றின் தாக்கம் மிகுதியாகவுள்ள நிலையில் அவர்களைத் தமிழகத்திற்கு அனுப்பி வைப்பதே அவர்களின் நல்வாழ்விற்கு உகந்ததாகும். எனவே, புலம்பெயர் தொழிலாளர்களாக மராட்டியத்திலுள்ள தமிழர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும் எனவும், தாராவியிலுள்ள அடித்தட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக மராட்டிய மாநில அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications