சனிகளில் எத்தனையோ விதம் இருக்கு.. எல்லா சனியின் மொத்த உருவம்தான் சீமான்.. ஜெயக்குமார் அட்டாக்!
சென்னை: சனிகளில் எத்தனையோ விதம் இருக்கிறது.. எல்லா சனியும் ஒன்று சேர்ந்த உருவம் தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை கொச்சையாக விமர்சிப்பதை சீமான் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தவெக தலைவர் விஜய் தற்போது பிரச்சாரம் என்ற பெயரில் உப்புமா தான் கிண்டிக் கொண்டிருக்கிறார். திமுகவிடம் 2 இட்லி, அதிமுகவிடம் 2 தோசை என்று பிச்சுப்போட்டு உப்புமாவை கிண்டிக் கொண்டிருகிறார். இந்தப் பக்கம் எம்ஜிஆரையும், அந்தப் பக்கம் அண்ணாவையும் வைத்துள்ளார். இதில் என்ன மாற்றம் இருக்கிறது?

இது ஒரு சனியன், அது ஒரு சனியன் என்று இரண்டு சனியன்களை எடுத்து போட்டு சட்டையை போட்டிருக்கிறார். சனிக்கிழமை, சனிக்கிழமை கிளம்பிவிடுகிறார் என்று விமர்சித்தார். விஜய் மட்டுமல்லாமல் அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகிய இருவரையும் சனியன்கள் என்று விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே பெரியாரையும் சீமான் கடுமையாக சாடி வருகிறார். தற்போது பெரியாருடன் சேர்த்து அண்ணா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரையும் விமர்சிப்பது அதிமுகவை கொந்தளிக்க வைத்துள்ளது. இந்த நிலையில் சிபா ஆதித்தனாரின் 121வது பிறந்தநாளையொட்டி எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.
அப்போது ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.. அதிமுக எப்போதும் நட்பை மதிக்கும்.. நட்புக்கு தலை வணங்குவோம்.. ஆனால் மறைந்த தலைவர்கள் குறித்து விமர்சிக்கும் போது, ஏற்கனவே பலரும் வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்கள். ஏன் சீமானுக்கு அடிக்கடி இப்படி ஆகுகிறது என்று தெரியவில்லை.
சிலருக்கு நாக்கில் சனி இருக்கும்.. சிலருக்கு ஜென்ம சனி இருக்கும்.. சிலருக்கு அஷ்டம சனி இருக்கும்.. ஏழரை சனி கூட இருக்கும்.. இந்த மாதிரி சனிகளில் எத்தனையோ விதம் இருக்கு.. என்னால் சனியும் ஒன்றுசேர்ந்த உருவம் தான் சீமான்.. நண்பர் சீமானை பற்றி நல்ல அபிப்ராயம் இருக்கிறது. அவர் மறைந்த தலைவர்கள் பற்றி கொச்சையாக பேசினால், எங்களின் பதிலடி வேறு மாதிரி இருக்கும்.
அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பற்றி சீமான் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவரைவிட கொச்சையாக பேசுவதற்கு அதிமுகவிலும் ஆட்கள் இருக்கிறார்கள். பேசவிட்டு எங்களாலும் சிரிக்க முடியும். ஆனால் மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது சீமானுக்கு நல்லதல்ல.. அதனை நண்பரான சீமானுக்கு சொல்லிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
“வருத்தத்தில் இருக்கிறேனா? வதந்தியை பரப்பாதீங்க.. நம்பிக்கை இருக்கு!” - சீனுக்குள் வந்த கவுதமி -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!












Click it and Unblock the Notifications