Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுக எம்எல்ஏவை வளைத்த கும்பல்.. காரை எடுத்துக்கொண்டு.. நேரில் களமிறங்கிய சேகர் பாபு! பரபர சம்பவம்

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னை புது வண்ணாரப்பேட்டையில் திமுக எம்எல்ஏவை அதிமுக நிர்வாகிகள் சிலர் தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரிய அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது.

நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தமிழ்நாட்டில் 60.70 % வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் அதிகபட்சமாக கரூரில் 75.84% வாக்குகள் பதிவாகி உள்ளன. சென்னை மாநகராட்சியில் குறைந்தபட்சமாக 43.59% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.

 என்ன

என்ன

நேற்று தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றாலும் சில இடங்களில் சர்ச்சைகள், பிரச்சனைகள் ஏற்பட்டன. புதுக்கோட்டையில் அதிமுக - திமுக நிர்வாகிகள் இடையே சிறிய மோதல் ஏற்பட்டது. அதேபோல் மதுரை மேலூரில் பாஜக முகவர் கிரிராஜன் இஸ்லாமிய வாக்காளர் ஒருவரை ஹிஜாப் அணிந்து வந்து வாக்களிக்க கூடாது என்று கூறி பிரச்சனை செய்தார். இந்த நிலையில் கிரிராஜன் தற்போது மேலூர் போலீசார் மூலம் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

புதுவண்ணாரப்பேட்டை

புதுவண்ணாரப்பேட்டை

இந்த நிலையில்தான் நேற்று புதுவண்ணாரப்பேட்டையில் மாலையில் திடீரென மோதல் ஏற்பட்டது. அங்கு இருக்கும் வார்டு என 38, 39ல் இந்த மோதல் நடைபெற்றது. அதிமுக, திமுக பூத் ஏஜெண்டுகள் அங்கு நின்று பேசிக்கொண்டு இருக்கும் போது பெரிய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சண்டையில் முடிந்து, சாலையில் குதித்து இரண்டு தரப்பினரும் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.

எம்எல்ஏ

எம்எல்ஏ

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த போலீசார் மோதலில் ஈடுப்பட்ட கும்பலை அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் சண்டை அறிந்து ஆர் கே நகர் தொகுதியை சேர்ந்த திமுக எம்எல்ஏ எபினேசர் அங்கு சென்றார். அப்போது அவரின் காரை சுற்றி வளைத்த அதிமுகவினர், அவரை நகர விடாமல் புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் சுற்றி வளைத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

தாக்குதல்

தாக்குதல்

அதோடு எபினேசர் காரை அதிமுகவினர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தகவல் அறிந்த அமைச்சர் சேகர் பாபு உடனடியாக காரை எடுத்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தார். எதனால் மோதல் ஏற்பட்டது, எம்எல்ஏ காரை தாக்கும் அளவிற்கு என்ன பிரச்சனை என்று விசாரித்தார். அங்கு இருந்த திமுக, அதிமுக நிர்வாகிகளிடம் என்ன பிரச்சனை என்று சேகர் பாபு தீவிரமாக விசாரித்தார்.

Recommended Video

    கால் தடுக்கி தவறி விழுந்த புகைப்பட கலைஞருக்கு கை கொடுத்து உதவிய நடிகர் விஜய் - வீடியோ
    போலீசார்

    போலீசார்

    அதோடு அங்கு இருந்த போலீசாரிடம் மோதல் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். போலீஸ் எண்ணிக்கையை இங்கே அதிகரியுங்கள் என்று அறிவுரை வழங்கிவிட்டு சென்றார். இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சேகர் பாபு, அதிமுக தமிழ்நாடு முழுக்க நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைய போகிறது. சென்னையிலும் திமுகதான் வெல்லும். தோல்வி பயம் காரணமாக அதிமுக இப்படி வன்முறையில் இறங்கி உள்ளது என்று குறிப்பிட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+