எல்லாம் சரி.. சுய சான்றிதழ் கட்டிட அனுமதி சூப்பர்.. ஆனால் பார்க்கிங் எங்கே? தமிழக அரசுக்கு கோரிக்கை
சென்னை: தமிழகத்தில், 2,500 சதுர அடி மனையில், 3,500 சதுர அடி பரப்பளவுக்கு வீடுகள் கட்ட, சுய சான்று அடிப்படையில் கட்டட அனுமதி வழங்கப்படும் நிலையில், முக்கிய கோரிக்கை ஒன்று, தமிழக அரசுக்கு விடுக்கப்பட்டுள்ளது.
சுய சான்றிதழ் கட்டிட அனுமதியை, இ-சேவை மையங்களில் வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு கையிலெடுத்துள்ளது. காரணம், சுயசான்றிதழ் கட்டிட அனுமதிக்காக, யாருக்கும் ஒரு பைசாகூட தராமல், பொதுமக்களே எளிதாக கட்டிட அனுமதி பெற வேண்டும் என்பதற்காகவே, தமிழக அரசு இந்த அதிரடியை செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, 2,500 சதுரடி கொண்ட மனையில், 3,500 சதுரடி வரையிலான தரைதளம் அல்லது தரைதளம் மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு கட்டிடங்களுக்கு சுய சான்றிதழ் முறையில் உடனடி கட்டட அனுமதி வழங்கப்படும்.
லஞ்சம் ஊழல் இல்லை: எனவே, இது தொடர்பாக https://onlineppa.tn.gov.in/SWP-web/ என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்குள் சென்று விண்ணப்பித்து கொள்ளலாம். இதனால், யாருக்குமே லஞ்சம் தர தேவையில்லை.. நேரடியாகவே விண்ணப்பித்து, எளிதாக கட்டிட அனுமதி பெற பொதுமக்களால் பெற்றுக் முடியும். இதற்கு குறிப்பிட்ட சில அடிப்படை ஆவணங்கள், வரைபடங்களை தாக்கல் செய்தால் போதும்..
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, "கட்டிட அனுமதிக்கு விண்ணப்பம் செய்வோரில் பெரும்பாலானோர் 3,500 சதுரடிக்குள் கட்டி வருபவர்கள் என்பதால், அந்த அளவைத்தேர்வு செய்து சுய சான்றிதழ் முறையில் அனுமதி தரப்படுகிறது. ஆனாலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக 20,000 ரூபாயில் இருந்து ரூ.50,000 வரை கேட்பதாக புகார்கள் எழுந்தவண்ணம் இருந்தன. எனவேதான், இ-சேவை மையங்கள் மூலம் கட்டட அனுமதி சான்றிதழ் வழங்கப்படுகிறது. இதுகுறித்த முறையாக அறிவிப்பு விரைவில் வெளியாகும்" என்கிறார்கள்.
திட்டங்கள்: எனினும், இந்த திட்டத்தில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.. குறிப்பாக, சுயசான்று முறையில் அனுமதி பெறப்படும் கட்டடங்களில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கான வழிமுறைகள் தெளிவாக இல்லை என்கிறார்கள்..
இதுகுறித்து, இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு சொல்லும்போது, "சுயசான்று முறையில் மக்கள் வீடு கட்ட எளிதாக, அனுமதி பெற முடிகிறது. ஆனால், பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 750 சதுர அடிக்கு ஒரு கார் நிறுத்துமிடம் ஒதுக்க வேண்டும்.
இடவசதி வேண்டும்: சுயசான்று முறையில் வழங்கப்படும் கட்டட அனுமதியில், FSI எனப்படும் தளப்பரப்பு குறியீட்டுக்குள் ஒரு பகுதியாக வாகன நிறுத்துமிடம் கணக்கிடப்படுகிறது. பிற கட்டடங்களுக்கு வழங்கப்படுவது போலவே, இதற்கும் தனியான வசதியாக வாகன நிறுத்துமிடங்களை அனுமதித்தால், பயன்பாட்டுக்கான இடவசதி மேலும் அதிகரிக்கும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications